RSS

Category Archives: R.S.S

வெறிப்பேச்சு பாஜக வேட்பாளர் கைது


ஒரிசா

மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவிஎச்பிபஜ்ரங்தள் உள்ளிட்ட ஆர் எஸ்எஸ் அமைப்பின் மதவெறி பரிவாரங்கள், கிறிஸ்தவ பழங்குடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்ட விழ்த்து விட்டன. அந்த வன்முறையை முன்னின்று நடத்தியவர்களுள் அசோக்சாகு மற்றும் மனோஜ் பிரதான் போன்ற விஎச்பி மற்றும் பாஜக நிர்வாகிகளும் அடங்குவர்.

கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவியும், அவர்களது வீடுகள், குடிசைகள், தேவாலயங்களை எரித்து நாசமாக்கியும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்தவ பழங்குடி மக்களை அவர்களது உறைவிடங்களிலிருந்து விரட்டியடித்தும் கொடுமைகள் புரிந்த மதவெறியர்களை தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது பாஜக.

பெரும் வன்முறை நடத்தப்பட்ட காந்தமால் தொகுதியில் பாஜக மதவெறியர் அசோக் சாகு, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார்.

கடந்த ஏப்ரல் 5-ம்தேதி காந்தமால் தொகுதியில் உள்ள ரெய்க்கியா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர், வன்முறையை தூண்டும் விதத்திலும், சிறுபான்மை மக்களை மிரட்டும் விதத்திலும் பேசினார். இதுதொடர்பாக, இவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.

மதவெறியைத் தூண்டுதல், பொது இடத்தில் இழிவாக நடந்து கொள்ளுதல், இதர பகுதி மக்களை திட்டமிட்டு ஆத்திரமூட்டுதல், கலவரம் விளைவிக்கும் நோக்கோடு பேசுதல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505, 295, 153, 125 ஆகிய பிரிவுகளின் கீழ் காந்தமால் மாவட்ட காவல் துறை, அசோக் சாகு மீது வழக்குகள் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, அசோக் சாகு தலைமறை வாகிவிட்டார். நயாகர் மாவட்டத்தில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காந்தமால் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து, பாஜக வேட்பாளர் அசோக் சாகுவை தேடி வந்தனர்.இந்நிலையில், செவ்வாயன்று புல்பானி நகரில் அசோக் சாகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக் சாகு மட்டுமின்றி ஒரிசாவில் ஜி.உதயகிரி மக்களவை தொகுதியில் பாஜக, மனோஜ் பிரதான் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவரும் காந்தமாலில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதான வழக்குகளுக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கிறார். இவர் ஒரு அப்பட்டமான குற்றவாளி என்று தெரிந்தும், பாஜக இவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

 

குறிச்சொற்கள்:

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்


இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க போவது.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு தொழில் என்ன? வருமானம் என்ன? அது எங்கு இருந்து வருகிறது? இவர்கள் சொத்து என்ன? இவை எப்படி மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது? போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவதில்லை. “தான் இந்த உலகத்தை இரட்சிக்க வந்த கடவுள்என்று கூறிக்கொள்ளும் இவர்கள் மனிதன் உருவாக்கிய சட்டத்திற்க்கு கட்டுப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமியார் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வருமான வரித்துறை 2006 ஆம் ஆண்டே கண்டு பிடித்துள்ளது ஆனால் எவ்வளவு வரி ஏய்ப்பு என்ற விவரத்தை இது வரை வெளியிடவில்லை வருமான வரித்துறை. ஆனால், 16 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அம்பலப்படுத்துகிறது மெயில் டுடே நாளிதழ்.

34419671_1

மோசடி மன்னன்

பா.. ஆதரவு ஆன்மீக அமைப்பான விஸ்வ ஜாகுருதி மிஷன் 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் என்று கூறிக் கொள்வது வழக்கம்.

மும்பையைச் சேர்ந்த மகாவீர் பிரசாத் என்ற தொழிலதிபர் இந்த அமைப்புக்கு 55 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்க்காக வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சான்றிதழ்களையும் இவர் இந்த அமைப்பிலிருந்து பெற்றார். ஆனால், வரி விலக்குக்காக அவற்றை சமர்ப்பித்த போது, அவையனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இவர் அளித்த புகாரின் பேரில் டிச 31.2006 முதல் இந்த அமைப்பை தங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்தது வருமான வரித்துறை. இந்த ஆன்மீக அமைப்பு வைத்துள்ள வருமான வரிக்கணக்கு எண்ணே போலி என்ற அதிர்ச்சிதரும் மோசடி அம்பலமாகியுள்ளது. மோசடி செய்தற்க்காக அமைப்பின் பொருளாளரை 2007ஆம் ஆண்டே கைது செய்தது வருமான வரித்துறை.

இந்த விவகாரத்தை மெயில் டுடே அம்பலபடுத்தியவுடன் உடனே இந்த செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என இந்த அமைப்பின் போது செயலாளர் தேவ்ராஜ் கடாரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் பா... உடன் நெருங்கிய தொடர்புடையவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மோசடி சாமியார் உடன் நின்று போஸ் கொடுக்க பாஜக தலைவர்கள் தவறமாட்டார்கள். தற்போது பொருளாளரையை பலிகாடவாக மாற்றிவிடலாமா என்று மோசடி அமைப்பினார் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை. இது போன்ற அனுபவம் பல உண்டு பா...விற்க்கு.

Visit: http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=2422009

 

குறிச்சொற்கள்:

அத்வானி மாறவில்லை


ராமர் கோவிலை பாஜக மறக்கவில்லை என்று அக்கட்சியின் “பிரதமர் வேட்பாளர்” எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அந்தக் கால ராஜாக்கள், தாங்கள் மிகப் பெரிய சக்கரவர்த்தி என்று அறிவிக்க, அசுவமேத யாகம் நடத்துவார்களாம். அதாவது, ஒரு குதிரையை அவிழ்த்து விடுவார்களாம். அந்தக் குதிரை பல நாடுகளுக்கும் சென்று சுற்றி வருமாம். அந்தக் குதிரையை பிடித்து கட்டுபவர்களோடு மன்னர் சண்டைக்கு செல்வாராம்.

அது போல, எதிர்கால பிரதமர் என்று அத்வானி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குதிரைக்கு பதிலாக அவரே யாத்திரை நடத்தி வருகிறார். இதையொட்டி உ.பி.யில் நடை பெற்ற ராஷ்ட்ர ரக்ஷா பேரணியில் பேசும் போதுதான், அத்வானி இவ்வாறு கூறியிருக்கிறார். ஆனால், அத்வானியின் அசுவமேத குதிரை இப்பொழுதே வாயில் நுரை தள்ள தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற உறுதியான நிலைபாடு மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு உதவியுள்ளது என்று அத்வானி வெளிப்படையாக கூறியுள்ளார். எனவே, இந்தத் தேர்தலிலும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தை பாஜகவினர் மீண்டும் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

பாஜகவை பொறுத்தவரை, ராமர் ஒரு தேர்தல் ஏஜெண்டை போன்றவர். தேர்தல் வந்தவுடன் பாஜக பரிவாரத்திற்கு ராமர் பக்தி பெருக்கெடுத்து ஓடத் துவங்கிவிடும். ஏற்கெனவே, ராமருக்கு கோவில் கட்டுவதாக கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் பகையை தூண்டிவிட்டு, பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாவதற்கு காரணமான இந்தக் கூட்டம் மீண்டும் ராமநாமம் உச்சரிக்க துவங்கிவிட்டது.

மறுபுறத்தில், மதச்சார்பற்ற அணியின் மொத்தக் குத்தகையை தாங்கள் எடுத்துள்ளதாக காங்கிரஸ் தம்பட்டமடிக்கிறது. நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங் அரசு தலைக்குப் புற கவிழ இருந்ததை காப்பாற்றி நிமிர்த்தி வைத்திருப்பது சமாஜ்வாதி கட்சிதான். பாபர் மசூதி இடிப்புக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கரைந்துள்ளார். இவரை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மதச்சார் பின்மையை காப்பாற்ற போகிறார்களாம். நல்லக் கூத்து.

 

குறிச்சொற்கள்:

இந்துத்வா தலிபானிசம்


இந்துத்வா கும்பல், 2009 ஜனவரி 24 அன்று மங்களூரில் பொது விடுதி ஒன்றில் இருந்த இளம் பெண்கள் மீது காட்டு மிராண் டித்தனமான முறையில் தாக்குதல் தொடுத் திருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். ஸ்ரீ ராம் சேனை என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள இந்துத்வா அமைப்புகளில் ஒன்று இத்தாக்குதலைப் புரிந்திருக்கிறது. தாங்கள் அவ்வாறு இளம்பெண்கள் மீது தாக்குதல் தொடுக்கவிருப்பது தொடர்பாக அது தனக்கு சாதகமான தொலைக்காட்சி ஊடகத்திற்கும் முன்னமேயே தகவல் அளித்து, இவ்வாறு வெறிபிடித்த மதவெறித் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளையும் ஒளிபரப்பிட வகை செய்துள்ளது. காட்டு மிராண்டித்தனமான முறையில் சம்பவம் நடைபெற்ற அன்றே, ஸ்ரீ ராம் சேனையானது, தனியார் அலுவலகம் ஒன்றினுள் நுழைந்து, இதேபோன்று சில சாக்குப்போக்குகளைச் சொல்லி, அங்கிருந்தவர்கள் மீது கடுந்தாக்கு தலைத் தொடுத்திருக்கின்றன. இவ்வாறு நடைபெற்ற தாக்குதல் தொடர்பாகக் கிஞ்சிற்றும் மனவருத்தமோ மனச்சங்கடமோ அடைந்திடாதது மட்டுமல்ல, மாறாக இதனைப் பெருமையுடன் நியாயப்படுத்தும் வகையில், “எங்களது பையன்கள் சற்றே அதீதமாக நடந்து கொண்டிருந்திருக்கலாம், ஆயினும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே, இந்நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காகவே. அவர்கள் நடந்து கொண்ட விதம் இந்தமுறை வேண்டுமானால் விவாதப் பொருளாக மாறியிருக்கலாம். ஆனாலும் எங்கள் பையன்கள் நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்கு உளப்பூர்வமாக இருந்திருக்கிறார்கள்’’ என்று ஸ்ரீ ராம்சேனையின் தலைவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.இவரது கூற்றை, இந்துத்வா தலிபானிசத்தின் ஓர் அசிங்கமான வெளிப்பாடு என்று கூறுவதைத் தவிர, வேறென்னவென்று அழைத்திட முடியும்? தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் பள்ளிக் கூடத்திற்கு செல்லத் துணிந்த ஐந்து இளம் சிறுமிகளை உயிரோடு புதைத்த சம்பவத்தை நினைவுகூர்க. தலிபான், பெண்களின்பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் உடைகள் மற்றும் நடத்தை விதிகளை வகுத்திருக்கிறது. இதனை எவரும் மீறும் பட்சத்தில் அவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்படுவார்கள். இதே தொனியில்தான் ஸ்ரீ ராம் சேனையின் தலைவரும், “எவரேனும் நம்பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை மீறும் பட்சத்தில், அதனை எதிர்த்திட நாங்கள் தயங்க மாட்டோம்’’ என்று கூறுகிறார்.பாரம்பரியப் பண்பாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இவ்வாறு நடத்தப் படும் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் மட்ட ரகமான காட்டுமிராண்டித்தனமே தவிர வேறல்ல. நவீன நாகரிக சமூகத்தின் அடிப்படைக் கூறுகள் மீதே அவர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். .இந்தத் தாக்குதல் தொடர்பாக, மக்கள் மத்தியில் கோபாவேசம் எழுந்ததையடுத்து, கர்நாடக மாநில அரசு நிர்வாகம், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டவர்களில் 31 பேரை இது வரை கைது செய்தது. (அவர்கள் அனைவரையும் பின்னர் விடுவித்தும் விட்டது.) ஸ்ரீராம் சேனையின் தலைவர் பிரமோத் முதலிக் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்படவில்லை. மாறாக தேவநாகரியில் மதவெறிச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு மதவெறியர்கள் தாக்குதல் தொடுப்பதென்பது, தெற்கு கன்னடப் பகுதியில் வழக்கமான நடைமுறையாக மாறிப் போயுள்ளது. பாஜக மாநில அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், இதுபோன்ற நிகழ்வுகள் குறைந்தது 14 இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய மத வெறி சக்திகள் தங்கள் காட்டுமிராண் டித்தனமான தாக்குதல்களைத் தொடர்வதற்கு, ஆளும் பாஜக அரசாங்கம் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிகழ்வுகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பில் பேட்டியளித்தவர், பொது விடுதிகளில் பெண்கள் இருப்பது, இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது’ என்று கூறி ஸ்ரீராம் சேனையினரின் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு இந்து மதவெறியர்களின் நடைமுறைகள், தலிபான் மதவெறியர்களின் நடைமுறைகளை கிட்டத் தட்ட அப்படியே ஒத்திருக்கின்றன. தலிபான் இயக்கத்தினர் அங்கே பாமியான் நகரில் புத்தர் சிலைகளை தரைமட்டமாக்கினார்கள் என்றால், இங்கே இந்துத்வா மதவெறியர்கள் பாபர்மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்..பாஜக ஆட்சிப்பொறுப்பேற்றபின் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கூர்மையாக அதிகரித்திருக்கின்றன. 2008 செப்டம்பரில் மட்டும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த தேவாலயங்கள் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களை அடுத்து மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. ஆயினும் மாநில அரசு, “கிறிஸ்தவர்களால் இந்துக்கள்மதமாற்றத்தில்’ ஈடுபடுத்தப்படுவதால்தான் இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாகக் கூறி அவற்றை நியாயப்படுத்துவது தொடர்கிறது.நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், தங்கள்இந்து வாக்கு வங்கி’யை ஒருமுகப்படுத்திட, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துமதவெறி அமைப்புகள், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் மற்றும் அதன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயரிய பண்புகளையும் தகர்க்கும் நடவடிக்கைகளில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றன என்பது தெளிவாகி இருக்கின்றன.

 

 

 

 

 

 

Vist:  http://videos.indiatimes.com/showvideo/4029890.cms 

 
 

குறிச்சொற்கள்:

அத்வானி வாழ்நாள் சாதனையாளரா?


பாஜக தலைவர் எல்.கே.அத்வானிக்கு 2008 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை என்டிடிவி (NDTV) தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கக்கூடிய அளவுக்கு அப்படி என்ன பெரிதாக சாதித்துவிட்டார் அத்வானி என்பது குறித்து மூளையைக் கசக்கிக் கொண்ட சித்தார்த் வரதராஜன்(இந்து நாளிதழின் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவர்) நினைவுக்கு வந்த பத்து சாதனைகளை தனது வலைப்பதிவில் பட்டியலிட்டுள்ளார். அவற்றை நாமும் தெரிந்து கொள்ளலாம்.


* 1992
ஆம் ஆண்டில் அவர் கண்ணெதிரே அரங்கேற்றப் பட்ட பாபர் மசூதி இடிப்பு சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தது.

* 1999ல் .சி 814 விமானக்கடத்தல். மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகள் ஜஸ்வந்த் சிங் துணையோடு ஆப்கனுக்கு விமானத்தில் அழைத்துச்செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.

* 2000 ஆண்டில் சிட்டி சிங்போராவில் தீவிரவாதிகளால் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது.

* 2003 மார்ச் மாதத்தில் நாடிமார்க்கில் காஷ்மீர் பண்டிட்டுகள் கூட்டாகப்படுகொலை செய்யப்பட்டது.

* 1999ல்அமர்நாத் யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் பயங்கரவாதத்தாக்குதல்.

* டிசம்பர் 2001ல் நாடாளுமன்றக்கட்டிடத்தின், மீது நடைபெற்ற தாக்குதல்.

* 2002 ஆம்ஆண்டில் கோத்ராவிலும், குஜராத்திலும் முஸ்லிம்கள் படுகொலை.

* 2002 ஆம் ஆண்டில் அஹமதாபாத் அக்ஷர்தாம் மற்றும் ரகுநாதர் ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள்.

* டெஹல்கா நிறுவனம் மற்றும் இப்திகான் கிலானி மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்.

* 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் சமர்ப்பித்திருந்த கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்துவிட்டு பயங்கரவாதி அப்சல் குருவை இன்னும் ஏன் தூக்கில் ஏற்றவில்லை என்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக கேள்விக்கணைகளைத் தொடுத்து வருவது.

ஆஹா! அத்வானி அல்லவா மகத்தான சாதனையாளர். அத்வானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இந்த பத்து சாதனைகள் போதாதா? இதேஅடிப்படையில் நரவேட்டை நரேந்திர மோடிக்கும் அடுத்த ஆண்டில் விருது வழங்கலாம் என்று நாம் பரிந்துரைக்கலாமா?

 

குறிச்சொற்கள்:

அபிநவ் பாரத்தின் நோக்கங்கள் என்ன?


கேள்வி: அபிநவ் பாரத்தின் நோக் கங்கள் என்ன?

பதில்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதும், உண்மையான பயங்கரவாதிகள் யாரென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பயங்கரவாதத்தை எப்படி எதிர்ப்பது என்று கற்பிப்பதும் எங்களது நோக்கங்கள். இதை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டது. அரசாங்கம் செயல்படத் தவறிவிட்டதால் எதிர்வினை தேவையாக இருக்கிறது. சாத்வி பிரக்ஞயாசிங் மற்றும் இதரர்கள் பற்றியும் காவல்துறை சொல்வது உண்மையாக இருந்தால், அது உண்மையான பயங்கரவாதத்துக்கு எதிரான வினையே…..

கேள்வி கேட்டது அவுட்லுக் இதழின் சைகத் தத்தா. பதில் சொன்னது அபிநவ் பாரத்தின் தலைவர் ஹிமானி சாவர்க்கர். அவர் இந்து மகாசபையின் தலைவரும் ஆவார். 61 வயதான இந்தப் பெண்மணி, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் புதல்வி. இந்துத்துவ தத்துவத்தின் பிதா மகன் வீ.டி.சாவர்க்கரின் சகோதரர் மகனை மணந்தவர்.

அவர் இதோடு நிறுத்தவில்லை. குண்டுவெடிப்புக்குப் பதில் குண்டு வெடிப்பாகுமா என்கிற கேள்விக்கு, ஏன் கூடாது என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார். (அவுட்லுக், 17 நவம்பர், 2008).

சங்பரிவாரின் எண்ணற்ற விஷக் கொடுக்குகளில் ஒன்றான ஏபிவிபி (மாணவர் அமைப்பு)யின் முன்னாள் செயலாளரான சாமியாரிணி பிரக்ஞயாசிங் மராட்டிய மாநிலம் மாலேகாவில் கடந்த செப்டம்பர்29ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்பது அம்பலமானவுடன் சிவசேனையின் தலைவர்களில் ஒருவரான மனோகர் ஜோஷியும் இப்படித்தான் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதபோது இப்படித் தான் நடக்கும் என்றார்.

இந்நிலையில்தான், எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று தொகாடியா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் சாதிக்கிறார்கள். அதாவது, மாலேகாவில் இஸ்லாமிய மாணவர் இயக்க அலுவலகத்தினருகே குண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சாமியாரிணி பிரக்ஞயாசிங் தாகூர் பயங்கரவாதி இல்லையாம். அதாவது, அவர் குண்டு வைக்கவில்லையாம். இத்தனைக்கும் அம்மணி சாதாரண ஆளில்லை. தான் ஏற்பாடு செய்த குண்டு வெடிப்பில் வெறும் ஆறு பேர்தான் பலியானார்கள் என்பது தெரிந்து மிகவும் விசனப்பட்டிருக்கிறார். ஏன் பலி எண்ணிக்கை இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தன் சகாவிடம் கேட்டாராம். அவ்வளவு நல்லவர்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பிறப்பால் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்று மதச் சார்பற்ற சக்திகளெல்லாம் கூறியபோது இந்துத்துவவாதிகள் அதை ஏற்கவில்லை. பயங்கரவாதிகளெல்லாம் முஸ்லிம்களே என்று வெறுப்பை வளர்த்தனர். பயங்கரவாதத்தை முஸ்லிம் மதத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்தினர். நாட்டில் மாவோயிஸ்டு, உல்பா, போடோ போன்றவை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. இப்போது அதே போல் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட இந்துக்களை இந்து பயங்கர வாதிகள் என்று அழைத்தால், குய்யோ முறையோ என்று குதிக்கின்றனர். பயங்கர வாதத்துக்கு மதம் கிடையாது என்று மதச்சார்பற்றவர்கள் சொல்லி வந்ததை இப்போது மதவாதிகள் ஒப்பிக்கின்றனர். மதச்சார்பற்ற கட்சிகள்தான் பயங்கரவாதத்தை மதத்தோடு சம்பந்தப்படுத்துகின்றன என்று கூறிவந்த இந்துத்துவவாதிகள் கையும் குண்டுமாக பிடிபட்டுவிட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார்கள். அதுவும் ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நேரத்தில் இனியும் அப்பாவி இந்துக்களை ஏமாற்ற முடியாதபடி அம்பலப்பட்டுப் போய்விட்டோமே என்ற பதட்டத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளற ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் பிரக் ஞயா சிங்கிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றவர்கள், பின்னர் அவர் பயங்கரவாதியே இல்லை என்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர் பயங்கரவாதி தான் அதிலென்ன தப்பு என்றும் சிலர் பேசுகிறார்கள்.

எப்படியாயினும் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒரு பயங்கரவாதக் கூட்டம்தான். காந்தி படுகொலை மற்றும் பிரிவினைக் கலவரங்கள் போன்றவற்றில் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள். பின்னர் இதுநாள் வரை வெட்டுக்கத்திகள், வீச்சரிவாள்கள், திரிசூலங்கள் போன்றவற்றால் சிறுபான்மையினரைக் கொன்று குவித்தவர்கள் சமீப காலமாக வெடிகுண்டுகளை வீச ஆரம்பித்துள்ளனர். அதுவும் சக்தி மிக்க ஆர்டிஎக்ஸ், அதுவும் ராணுவத்தரம் வாய்ந்த ஆர்டிஎக்சைப் பிரயோகித்துள்ளார்கள். அதைக் கொடுத்தவர் பதவியிலிருக்கும் ராணுவ லெப் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்.

ராணுவத்தில் மதவாதிகள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ அளிக்கக் கூடிய செய்தியே அல்ல. அந்த உண்மை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருக்கிறது, அவ்வளவுதான். கடந்த தேர்தல்களில் பாஜகவின் சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் போட்டியிட்ட போதே அது எதிர் பார்க்கப்பட்டதுதான். ஓய்வு பெற்றதும் பாஜகவில் சேர்கிறார்கள் என்றால் பதவியிலிருக்கும் போதும் மதவாதிகளாகத் தானே இருந்திருப்பார்கள்?

புனேயில் மகாராஷ்டிரா மிலிட்டரி பவுண்டேஷன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற கர்னல் ஜெயந்த் சித்தாலே. “என்னுடைய ஆட்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியில் உள்ளனர். ஒவ்வொருவரும் என்னால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். செய்ய வேண்டியது என்னவென்றும், அதைச் செய்வதற்காக உறுதியும் பூண்டவர்கள். தேசத்துக்காக எதுவும் செய்வார்கள்’’ என்று பெருமையாகக் கூறுகிறார். ஸ்ரீகாந்த் புரோகித் இங்கு பயிற்சி பெற்றவர் தான். தேசத்துக்காக எதுவும் செய்வார்கள் என்று சித்தாலே சொன்னதன் அர்த்தம் என்னவென்று புரிந்திருக்கும்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று குஜராத்திலுள்ள அசிமானந்த் என்பவர் மீது காவல்துறை சந்தேகிக்கின்றனர் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானதிலிருந்து அசிமானந்த் குஜராத்தில் தென்படவில்லை. ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான வனவாசி கல்யாண் பரிசத் என்ற அமைப்பின் தலைவரான இந்த அசிமானந்த் அந்தமானுக்கு தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த போலி சாமியார் அசிமானந்த் குஜராத்தைச் சேர்ந்தவர் அல்ல. அந்தமானிலிருந்து 1997 ஆம் ஆண்டு இங்கு வந்துள்ளார். ஒரு ஆண்டுக்குள்ளேயே மத ரீதியான மோதல்கள் அதிகமாகின. இவரின் மதவெறிப்பிரச்சாரங்கள் அதற்குப்பெரிய காரணமாக இருந்தது. 1998 ஆம் ஆண்டில் அவர் இருந்த டாங்ஸ் மாவட்டத்தில் மட்டும் 38 முறை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2006 ஆம் ஆண்டு இவர் நடத்திய பெரிய விழா ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவற்றின் உதவியோடு நடத்தப்பட்டது. அதில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரக்ஞாசிங் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.

பயங்கரவாதத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடைமுறையில் இரட்டை அணுகுமுறையை குஜராத் அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிமாக இருந்தால் எந்தக் கேள்வியும் கேட்காமல் வேறு மாநில காவல்துறையுடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்த மதவெறியர்களாக இருந்தால் பிற மாநில காவல்துறை கொண்டுவரும் ஆவணங்களில் ஏதாவது குறைகூறி திருப்பி அனுப்பும் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்களின் மூலமாகத்தான் அசிமானந்த் அந்தமானுக்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதன் இடையில் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் வடக்கு போயிலூரில் நவ.10அன்று செருவாஞ்சேரியில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் பிரதீபன் மற்றும் திலீபன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் அதே பகுதியிலேயே மேலும் 18 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சதித் திட்டம் பெரியதாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறை கண்ணூர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.

இதில் தற்போது 125 குண்டுகள் சிக்கியுள்ளன. கொளவல்லூர் காவல் நிலையத்தின் பகுதியில் அமைந்துள்ள வடக்கு போயிலூரில் இவை கிடைத்தன. நான்கு சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் போலீஸ் படை விரைந்துள்ளது.

இவை அத்தனையும் வெடித்திருந்தால் எத்தனை அப்பாவி மக்கள் உயிரெழந்து இருப்பார்கள். இத்தனைக்கும் மேல் காங்கிரஸ் அரசு RSS VHP  மற்றும் பஜராங் தள் இயக்கங்கலை தடை செய்யாமல் இருப்பது தானும் ஒரு மதம் சார்ந்த காட்சி என்றே நிறுவுகிறது.

 

குறிச்சொற்கள்:

மாலேகாவ் குண்டுவெடிப்பு பாஜக எம்.பி.க்கு தொடர்பு?


மாலேகாவ் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பாஜக மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பு உள்ளது என வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் ஆதித்ய நாத்தின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் தலைவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சங் பரிவார கும்பலைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் அடங்குவார்.

இந்தக் கும்பல் போன்சாலா என்னுமிடத்தில் நடத்தப்படும் இந்து மதவெறி ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும், இந்த பள்ளியில் பயின்றவர்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சியும், வெடிமருந்துகளும், ராணுவப் பயிற்சியும் அளித்ததில் இந்திய ராணுவத்தில் தற்போது வேலையில் இருக்கும் லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோகித் என்பவருக்கும் முக்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் எம்.பி.யான யோகி ஆதித்யநாத் மீதும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.யான யோகி ஆதித்யநாத், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தீவிர இந்துத்துவ மதவெறியை தூண்டிவிட்டதன் மூலம், அம் மாநிலத்தில் அழிந்து கொண்டிருந்த பாஜகவுக்கு சற்று உயிர் கொடுத்தவர் ஆவார். சமீபத்தில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது விஎச்பி – பஜ்ரங் தள் வெறியர்கள் நடத்திய கொடூரப் படுகொலைகளை நியாயப்படுத்திய ஆதித்யநாத், “இந்து கடவுள்கள் எப்படி ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார் களோ, அதே போல அனைத்து இந்துக்களும், ஆயுதங்களை ஏந்தி எதிரிகளை அழிக்க வேண்டும்” என்று கூறியவர் இவர். கோரக்பூர் கோவில் டிரஸ்ட்டின் தலைவராக உள்ள ஆதித்யநாத், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள எடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை தனது மத வெறி பரிவாரத்தினருடன் சென்று மிரட்டல் விடுத்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறச் செய்தவர் என்றும் இவர் மீது அடுக்கடுக்கான குற்றப் பட்டியல் நீள்கிறது.

மாலேகாவ் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப் பட்ட சாத்வி பிரக்யா சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதை கடுமையாக குறை கூறிய ஆதித்யநாத், மாலேகாவ் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தீவிரமாக ஆதரித்துப் பேசினார்.

இந்நிலையில், விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை விசாரணை நடத்த அனுமதி வேண்டுமென மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையறிந்த ஆதித்யநாத், துணி விருந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று தானாகவே கூறி, குண்டு வெடிப்புகளில் தனக்குள்ள தொடர்புகளை லேசாக வெளிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா போலீசார் இவர் மீதான புலனாய்வை தீவிரபடுத்தியுள்ளனர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் சில நகரங்களிலும், பரூக்காபாத் உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்தியுள்ள புலனாய்வில், மாலேகாவ் குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடங்கள், பாஜக எம்.பி. ஆதித்ய நாத்தின் செல்வாக்குமிக்க இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிச்சொற்கள்:

கம்யூனிஸ்ட்களை கட்டைகளால் தாக்கிய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!


rss12ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் கருத்தரங்கை எதிர்த்த கம்யூனிஸ்ட், தமுமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை தடியால் அடித்து காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தனி வகுப்பு நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் நடந்துள்ளது. இந்த கருத்தரங்குக்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான ஆர்எஸ்எஸ் உறுப்பனர்கள் வந்திருந்தனர். வாகனங்களில் தடி, உருட்டுக் கட்டைகளையும் அவர்கள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமுமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் கொடிகளுடன் பலர் பள்ளி முன் திரண்டனர். மதவாதம், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் நடத்தும் கருத்தரங்குக்கு, பொது இடமான பள்ளியில் எப்படி இடம் தரவலாம் என்று என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
rss21அப்போது, சில ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வெளியில் வந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்துள்ளனர்.

rss3

ஆர்எஸ்எஸ் வன்முறை

உடனே பள்ளிக்குள் இருந்து தடிகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் காக்கி அரைக்கால் சட்டையுடன் திமுதிமுவென ஓடிவந்தனர் ஆர்எஸ்எஸ்காரர்கள். வெளியில் நின்றிருந்த அனைத்துக் கட்சிகளின் இளைஞர்கள், முதியோர் என எல்லாரையும் வெறியோடு தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். டியவர்கள் மீது கற்களையும் வீசித் தாக்கினர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கமலநாதன், விடுதலைச் சிறுத்தைகள் டேவிட், நாராயணன், தமுமுக பாஷா, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா, ராகவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கள் சமுத்திரக்கனி, முனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலு, சிவபாதசேகரன், பஞ்சாட்சரம் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகி அருண்குமாரை அழைத்த போலீஸ் அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினர். கோட்டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி நாராயணசாமி கூறுகையில், ‘அமைதியான நகரம் காஞ்சிபுரம். இங்கு ஆர்எஸ்எஸ் காலூன்றி மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கப்பார்க்கிறது. அதைத் தடுக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கட்சிக்காரர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தாக்கினர். கமலநாதனை இழுத்து ரோட்டில் போட்டு தடியால் தாக்கினர். பாஷா தடுத்தார். அவர் முகத்தில் குத்தினர். அவருக்கு 4 பல் உடைந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கண்டித்தும், இந்த வன்முறைக் கும்பலை காஞ்சிபுரத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் 10-ம் தேதி காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்றார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் திட்டமிட்ட வன்முறைப் பயிற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், நேற்றைய வன்முறையைக் கண்டித்தும் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் இதற்கு தலைமை வகித்தார்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 9, 2008 in அரசியல், R.S.S

 

குறிச்சொற்கள்:

மதமாற்றமும், மதச்சார்பின்மையும்!


 

ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு ஏராளமான சேதாரங்கள் ஏற்பட்டுவிட்டன. வீடிழந்தோர், பொருளிழந்தோர், தீயில் பொசுக்கப்பட்டோர், அடித்தே கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறைக்கு ஆளானோர், ஆயிரக்கணக்கில் அனாதைகள் ஆனோர் என இப்படி அவர்கள் பட்ட துயரங்கள் நீளுகின்றன.

கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன; சில கொளுத்தப்பட்டன, ஏசுபிரான் சிலைகள், மாதாவின் சிலைகள் சிதைக்கப்பட்டன – உடைக்கப்பட்டன, பைபிள்கள் கொளுத்தப் பட்டன – கிழிக்கப்பட்டன – மிதிக்கப்பட்டன – இப்படி அராஜகங்கள் விரிவடைந்தன.

அந்த இரண்டு மாநிலங்களிலும் அரசுகள் இருந்தனவா, இயங்கினவா என ஐயப்பாடு கொள்ள வேண்டியுள்ளது.

சிறுபான்மையோர் மீது இப்படிச் சீரழிவுகளை வாரியிழைக்கும் சிறு மதியாளர்கள் சொல்லும் காரணங்கள்தான் என்ன?

கிறிஸ்தவஅமைப்புகள் இந்துக்களைக் கட்டாயப்படுத்தி “கன்வர்ட்” செய்கிறார்கள், ஜனத்தொகையில் கிறிஸ்தவர்கள் பெருகிவருகிறார்கள், இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் என்கிறார்கள். அறிவியல் கணக்குகள், ஆய்வுகள் எல்லாம் இந்தப் பெருக்கக் கணக்கு அபாண்டமான பொய் என நிரூபித்துவிட்டன.

இந்துக்களை மதமாற்றம் செய்வது ஆகப் பெரிய மகா பாவம், அட்டூழியம், ஆக அதற்குக் காரணமானவர்கள் அழிக்கப்பட்டே தீர வேண்டுமென சூலாயுதம் தூக்கிக் கொண்டு நர வேட்டை ஆடுகிறார்கள்.

பா.ஜ.க. தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், பின்னாள் வரவிருக்கிற பிரதமர் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவரான அத்வானியும் சொல்லும் வாதம் இந்த மத மாற்றம் பற்றி நாடு பூராவும் பொது விவாதம் நடத்த வேண்டும் என்று திசை திருப்புகிறார்கள், அட்டூழியங்களை நியாயப்படுத்த மத மாற்றங்களைப் பூதாகரப்படுத்துகிறார்கள், மாபெரும் குற்றம் என்கிறார்கள்.

ஆனால், காயப்பட்ட மக்களுக்கு கடுகளவு கூட கண்ணீர் சிந்தவில்லை. இரும்பு இதயம் படைத்த சுத்த இந்துக்கள்.

மதம் மாறுவதோ, மதத்தை பரப்புவதோ சட்டப்படி குற்றமில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுவது என்ன?

“சமய உரிமைப் பேற்றுக்கான உரிமை” என்ற தலைப்பில் விதி 25 சொல்லும் விளக்கம் :

“…. அனைவரும் மனச்சான்று உரிமைப் பேற்றுக்கும், தங்கு தடையின்றி சமயத்தை வெளிப்பட மேற்கொள்ளுதல், பயிலுதல், பரப்புதல் ஆகியவற்றுக்கான உரிமைக்கும் சமமாக உரிமைப்பாடு உடையவர் ஆவர்” – என விவரிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி விளக்கிக் கொள்ளுவது?

அ.தங்கு தடையின்றி வெளிப்படையாக எந்த சமயத்தையும் மேற்கொள்ளலாம்; மனச்சாட்சிபடி;

ஆ. எந்த மதத்தையும் பயிலலாம்;

இ.எந்த மதத்தையும் பரப்பலாம்.இது ஒரு குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. மதம் அவன் சொந்த விவகாரம்.

இங்கே கடைசியாகச் சொல்லப்பட்டுள்ள பரப்பலாம் என்பதின் பொருளை ஆழமாகப் புரிதல் வேண்டும்.

ஒரிசாவில் கடந்த 40 ஆண்டுகளில் ஒருவர் கூட – ஒரு பழங்குடியினர் கூட கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படவில்லை. என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கலவரங்களையும், அட்டூழியங்களையும் நேரில் பார்வையிடச் சென்ற தேசிய சிறு பான்மைக் கமிஷன் சொன்ன விவரங்கள் “பஜ்ரங்தள்” சதியாளர்களை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

ஒரிசா மாநிலத்தில் மதச் சுதந்திர சட்டப்படி கட்டாயப்படுத்தி பழங்குடியினர் மதம் மாற்றினார்கள் என்ற ஒரு புகாரும் இதுவரை மாநில அரசால் பதிவு செய்யப்படவில்லை. ஒரு கிறிஸ்தவ பிரமுகரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஆனால், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று சொல்லி “பஜ்ரங்கள்” – பயங்கரவாத செயலில் ஈடுபட்டது.

சொந்த மாநிலத்திலேயே 20,000க்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டு 14 இடங்களில் அகதிமுகாமில் முடங்கிக் கிடக்கிறார்கள். பயத்தால் பதுங்கிக் கிடக்கிறார்கள். பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தள் போடும் கட்டளை, ‘மீண்டும் அந்த ஏழை பாழைகள் தங்கள் இருப்பிடம் செல்ல வேண்டுமென்றால், மீண்டும் இந்துவாக மதம் மாறித்தான் செல்ல வேண்டும், அல்லாது போனால் அவர்கள் கடைசிவரை அனாதைகளாகத்தான் வாழ வேண்டும் என்று பய முறுத்துகிறார்கள். இந்த பயங்கரவாதிகள்தான் கட்டாய மதமாற்றத்துக்கு நிர்ப்பந்தம் செய்கிறார்கள். சட்டப்படி இவர்கள் தான் இப்போது தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நேரில் பார்த்து விசாரணை நடத்த வந்த தேசிய சிறுபான்மைக் கமிஷன் சரியாகவே ஒரு பரிந்துரையைச் செய்துள்ளது.

“மாநில அரசு அமைதி சூழலை உருவாக்க முடியவில்லை என்றால், கதியற்றும் கிடக்கும் கிறிஸ்தவ மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை உருவாக்க இயலவில்லை என்றால், நடுவண் அரசு அரசியலமைப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அரசின் செயலற்றத் தன்மையினால், உற்சாகம் பெற்ற பயங்கரவாத பஜ்ரங்தள் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு இந்த அராஜகத்தை பரப்புகிறது. உடனடியாக நடுவண் அரசின் நடவடிக்கையைக் கோரி இவ்வளவு அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது.

“மதநல்லிணக்கத்துக்கு ஊறு செய்து மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்” என்றும் கோருகிறது.

கர்நாடகாவிலும் இதே கசப்பான சம்பவங்கள் தான் நடந்துள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களை உடைத்துத் தள்ளியது நான் தான். மேலும் உடைப்பேன் – என பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ‘பஜ்ரங்தள்’ தலைமையின் மீது கர்நாடக சர்க்கார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்பதையும், கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூட மதக் கலவரங்களை உருவாக்கும் அமைப்புகளை பஜ்ரங்தள் போன்றவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதக் கலவரங்களுக்குப் பக்கபலமாய் இருக்கும் அரசாங்கங்களைக் கலைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்துத்துவாவாதிகள் மதமாற்றம் என்ற பிரச்சனையை ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறார்கள். நெருங்குகிற ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், வரவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தல் என இதன் மீது நரியாய் கண் வைத்து, இந்துக்களின் வாக்கு வங்கிகளை வளைத்துப் போட இந்துத்துவாவாதிகளின் சதித் திட்டமாகும் இது. இப்படி ஏற்கனவே சதி செய்து ஆட்சி சுகத்தை சுவைத்தவர்கள்.

அரசியல் லாபம் பெறத்தான் மக்களை மதத்தின் பேரால் பிரித்து நாட்டை நாசப்படுத்தும் நய வஞ்சக செயல் இது.

மேற்படி பாஜகவும், அதன் சங்பரிவாரங்களும் கூக்குரலிடுவது போல் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை.

இறை நம்பிக்கையாளர் குன்றக்குடி அடிகளார் சொன்ன பொன்னான கருத்து இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

“இந்து மதம் ஒரு மா சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் சிலர் குவளை கொண்டோ, குடம் கொண்டே நீரை அள்ளிச் செல்லுவதால், இந்து மாசமுத்திரம் வற்றிவிடாது”- என்றார்.

பின் ஏன் சங்பரிவார் கூட்டத்தார் மதமாற்றம் பற்றி கவலைப்படுகிறார்கள், இந்து மதத்துக்கு ஆபத்து என்கிறார்கள்!

கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர் பெரியார் சொன்னதும் நூறு சதம் சரி!

மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களும், சுயலாபம் தேடுகிறவர்களும்தான் மத மாற்றம் பற்றி பூசல் எழுப்புவார்கள்? கவலைப் படுவார்கள்” என்றார்.

பாஜக, சங்பரிவார் அமைப்புகளால், அவர்களின் வஞ்சனைமிக்க செயல்களால் சமூக இணக்கம், ஜனநாயகப் பண்பாடு சிதைக்கப்படுகிறது, பாழடிக்கப்படுகிறது. இதன் பின் விளைவு இந்தியாவை மீட்க பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அற்புதம், அதிசயம். இந்த அதிசயம், அற்தம் காக்கப்பட மதச் சார்பின்மை – எனும் கோட்பாடுதான் பலமான தூண். இந்தத் தூண் பலகீனமானால், மக்கள் மதத்தின் பேரால் பகைத்துக் கொள்ளும், அடித்துக் கொள்ளும், அழித்துக் கொள்ளும் நிலைமை உருவாகும். விளைவு கங்கையிலும், காவிரியிலும் ஓடும் தண்ணீர் செந்நீராய் மாறிப் போகும். இந்த இழப்பு வராமல் தடுக்க ஒரே வழி, ஒரே தாரக மந்திரம் ஒவ்வொரு இந்தியனும் மதச்சார்பற்ற கொள்கையை அடைக்காப்பது தான்!

 

குறிச்சொற்கள்:

ஆர்எஸ்எஸ் தலைவர் வீட்டில் குண்டுக் குவியல்


கேரள மாநிலம் தலைச் சேரியில் ஆர்எஸ்எஸ் தலை வரின் வீட்டு முற்றத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிக வெடிப்புச்சக்தி யுள்ள குண்டுக் குவியல் கைப்பற்றப்பட்டது.

தலைச்சேரியைச் சேர்ந் தவர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிபின்தாஸ். இவரது வீட்டு முற்றத்தில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிக வெடிப் புச் சக்தியுள்ள 20 குண்டு களைக் கைப்பற்றினர். வீட் டின் முற்றத்தில் பிளாஸ் டிக் பக்கெட்டுக் குள் குண்டுகள் ஒளித்து வைக்கப்பட் டிருந்தன.

 

குறிச்சொற்கள்: