RSS

Category Archives: M.B.B.S

அன்புமணியின் ஊழல் – சோலை


இந்தியாவிற்கே தேவையான தடுப்பு ஊசி மருந்துக்கள் உற்பத்தி செய்த மூன்று நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மூடினார்.

அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்துகளை கோடிக்கணக்கான ரூபாய்களுக்குத் தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்ய ஆரம்பித்தனர். இதனை அந்த நிறுவன ஊழியர்களும் எதிர்த்தனர். இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு ஏதோ காலிக்குட்டங்களின் சலசலப்பு என்றே அன்புமணி கருதினர்.

குன்னூர், சென்னைகிண்டி, இமாச்சலப் பிரதேசம்கஸொலி ஆகிய இடங்களில் இயங்கிய தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களைத் தான் மத்திய சுகாததாரத் துறை மூடியது. இவை மூன்றும் மக்களுக்குச் சொந்தமானஅரசுக்கு சொந்தமான போது துறை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் மூடப்பட்டத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

அந்த நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களுக்காக அணி திரண்ட தொழிற்சங்க இயக்கங்களும் எழுப்பிய குரல் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ என்ற கவலையும் பிறந்தது.

பொதுத்துறையின் மூன்று நிறுவனங்களையும் மூடியதுதனியார் கம்பெனிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கான சதியே என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ராங்கராஜன் பிரதமரிடம் மனுக்கொடுத்தார். அந்த மனுவை பிரதமரை நேரடியாகச் சந்தித்தே கொடுத்தார். அதன் பின்னர் அசைவுகள் தெரிந்தன.

இப்போது அன்புமணிக்கு கேள்விப் பட்டியிலே பிரதமர் அலுவலகம் அனுப்பியிருக்கிறது. பட்டியலைத் தந்திபோல் பாவித்து தக்க பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

தடுப்புஊசி மருந்துகளைத் தனியாரிடம் வாங்குவதற்காக இதுவரை எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது?

அப்படி வாங்கப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டதா? அன்னிய நிறுவனங்ககள் தயார் செய்ததா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா?

மூடப்பட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் ISO 9002 தரச் சான்றிதழ் பெற்றவை. அப்படி இருக்கும் போது அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் அந்த நிறுவனங்களை ஏன் மூடினீர்கள்?

இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பு ஊசி மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணாயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறதா?

மூடப்பட்ட மூன்று அரசு நிறுவங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் தரக் குறைவானது என்றால் அதன் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதா? அத்தனை மத்திய சுகாதாரத் துறை செயல்படுத்தாமல் பகாசுரத் தனியார் நிறுவனங்களிடம் எப்படிக் கொள்முதல் செய்ய முன்வந்தீர்கள்? அதனால் ஏற்ப்பட்ட கூடுதல் செலவு எவ்வளவு?

படமெடுக்கும் இந்தக் கேள்விகெல்லாம் யாரும் எழுப்பிவிட்டதல்ல. மத்திய சுகாதார துரையிடம் பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கும் கேள்விகள்தான் இவை. தொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தான் தொட்டுக் காட்டி இருக்கிறோம்.

நமது மூன்று தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களும் உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட மத்திய சுகாதாரத் துறைக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். அதனை விடுத்து இன்னும் பலப்பல கோடிகள் அதிகச் செலவில் தனியாரிடம் மருந்துகள் வாங்குவது ஏன்? என்ற கேள்வி நியாயமாகவே எழுந்திருக்கிறது. எனவே, இதில் பெரிய சதி, ஊழல், மோசடி நடந்திருக்கிறது. என்று மார்க்ஸிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன் சுட்டிக் காட்டியிருப்பது பொருள் பொதிந்தாகும்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களை மூடியது மத்திய அமைச்சரவையின் முடிவல்ல. பிரதமர் அலுவலகத்திற்க்கே தெரியாமல் நடந்த காரியம். மூடுவது என்பது சுகாதாரத் துறை எடுத்த தன்னிச்சிசையான முடிவுதான். அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும். இதுவரை எத்தனை கோடி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது இனி வெளிச்சத்திற்கு வரும்.

இலங்கைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்றுக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்டங்களில் ஒன்றாகும். அதனை ஏன் மையஅரசு செயல்படுத்த மறுக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். நியாயமான கேள்வி. பாராட்ட வேண்டியவாதம்.

ஆனால், அதேபோல் தான் பொதுத்துறை நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டம் தான். அதனை மறந்து மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமல் பிரதமர் அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூடினார்கள்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இன்னொரு குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன கூறுகிறது? மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும். அதற்கான உததரவதத்தை அரசு செயல்படுத்தும் என்று கூறுகிறது ஏதோ பம்பர் பரிசு மாதிரி அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு குறைந்தப்பட்ச செயல் திட்டத்தைத் தெரியுமா? அதனை எப்படித் தயாரித்தார்கள் என்பது தெரியுமா?

மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் தருவதற்கு உற்பத்திக்கு என்ன செய்ய வேண்டும்? திட்டம் தருக என்று அன்பு மணியை பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கிறது. அந்த மருந்துகளும் பொதுத் துறை நிறுவனங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

மூன்று பொதுத் துறை நிறுவனங்குகளை மூடிய வேகத்தில் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அதே மருந்துகளைத் தயாரிக்க அன்புமணி தயாரானார். அதற்கான அறிவிப்பும் வெளியனாது.

தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் மூன்று நிறுவங்ககளும் மூடப்படவில்லை என்று நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சூப்பராயனுக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார். மகிழ்ச்சி.

ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லையே என்ன காரணம்? அந்த நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் முழுச் சம்பளத்தோடு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?

அதே சமயத்தில் இந்திய மருத்துவத் துறையில் அன்புமணி செய்துள்ள சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். தமிழக அரசு துவக்கிய மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் 100 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். அதே சமயத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். இந்த பாரபட்சம் ஏன் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு ரொம்பத் தாராளம். ஆனால், அந்த வசதி அரசினர் கல்லூரிகளில் இல்லை என்று ஜி.கே. மணி பெயரில் ஓர் விளக்கம் வந்தது. கேழ்வரகில் நெய் வழிகிற தென்றால் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை நகரச் சுற்றி ஆறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அனைத்தும் தனியருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் தான். இப்படி இந்தியா முழுமைக்கும் தனியருக்கு எத்தனை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றார்? பட்டியல் வெளியிட்டால் சேவையின் சிறப்பு தெரியும்.

ஆதாரம்: ரிப்போட்டார் 12.2.2009 பக்கம் 34,35. 

 

குறிச்சொற்கள்:

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்


சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளதுதனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது

.

தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன

.

ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பு மணி உத்தரவிட்டார் ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இங்கே தான் அன்புமணியின் ஊழல் ஆரம்பம் ஆகிறது.

மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார். ஆணை பிறப்பித்த கையோடு இனி இந்த மருந்துகளை தனியார் நிறுவனக்களிடம் அரசு கொல்முதல் செய்யும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த தனியார் நிறுவனம் எது தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா

 

இது யாருடையது தெரியுமா?

பி. சுந்தரபரிபூரணம் 

இவர் யார் தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.

திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.

 

பொது துறை நிறுவங்கள் மூட யார் காரணம் ?

முதலில் இந்த பாஸ்டர் ஆய்வகத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பாஸ்டர் ஆய்வகம் 1907 ஏப்ரல் 6 அன்று பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் ஸதர்ன் இந்தியா என துவங்கப்பட்டது. பின்னர் 1977 பிப்ரவரி 10ல் பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் இந்தியா (தன்னாட்சி) ஆனது. அப்போது இதை எதிர்த்து பல போராட்டங்கள் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்டது. கடைசியில் அரசு வென்றது. 1907ல் வெறி நாய்க்கடி மருந்து மூளைத் திசு மூலம் தயாரிக்கப்பட்டது. 1957ல் ஆசிய ப்ளூ வைரஸ் தனித்து எடுக்கப்பட்டது. 1970ல் இந்தியாவில் முதல் முறையாக வெறி நாய்க்கடிக்கானா மருந்து மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகப் படுத்தப்பட்டது. 1970 இந்தியாவில் முதல் முறையாக போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1982ல் தேசிய தடுப்பு மருந்து திட்டதிற்க்காக முத்தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1988ல் வெறி நாய்க்கடிக்கான மருந்து திசு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்பட்டது.

இத்தனை பெருமையும் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் இந்திய தொழில் நுட்பத்தினால் மட்டுமே அடைந்தது. இதில் வேறு எந்த நாடும் நமக்கு வழங்கவில்லை.ஆனால், இப்போது பொறுப்பில் வகிக்கும் நிர்வாக இயக்குநர் இலங்கேஸ்வரன் மிக திறமையாக இயங்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு துறையையும் படிப் படியாக முட நிரந்தரமாக மூடி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உயிர் வாழும் வெள்ளை எலி கூடத்தை சென்னைக்கு மாற்றினார், இதன் மூலம் 544 வெள்ளை எலிகள் இறந்துவிட்டது. உடனே இந்த ஆய்வு கூடத்தை மூடி விடும் படி உத்தரவு பிறப்பித்தார். சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற போலியோ சொட்டு மருந்துகளை சோதனை செய்யும் கூடத்தை எந்த காரணமும் இன்றி மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளான டிடிபி எனப்படும் டிப்தீரியா,டெட்டனஸ், பெர்ட்டிசிஸ் ஆகியவை ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான், ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் முத்தடுப்பு மருந்துகளாகும். நாட்டின் தேவையில் 60 % இந்த ஆய்வகம் தயாரிக்கிறது. இப்போது இந்த ஆய்வகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் (05.02.2008)புது டில்லியில் சுகாதார செயலாளர் முன்னிலையில் கூடிய பொதுகூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்னையில் இலங்கேஸ்வரன் ஓய்வு எடுத்து கொண்டார். அதனால் அக்கூட்டத்தில் இதை வெறும் ஆய்வு கூடமாக வைத்து கொண்டு உற்பத்ியை நிறுத்துவது என முடிவு செயப்பட்டது. 

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி . சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியா பயனீர் நாளிதழ் வெளியிட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன.

 

சரி, இவர்கள் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எங்கு இருந்து பணம் வந்தது?

சென்னையில் உள்ள ஒரு வங்கியில் தான் கடன் பெற்றுருக்கிறார்கள். இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது. 

தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பிய பொது அன்பு மணி ராமதாஸ் இந்தியாவில் தடுப்பு ஊசி  மருந்து தட்டுப்பாடு உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்.

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

 

குறிச்சொற்கள்:

கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை


மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒரு சுற்று போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள் தமிழக முதல்வரும், மருத்துவத் துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை முடிந்த பிறகு நாலரை ஆண்டு காலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம்(எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின் படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் – ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக்கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.
கிராமப் புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்பவர்கள் “சமூகத்தின் எதிரி” என்று அன்புமணியும் அவரது குடும்ப கட்சி தலைவர் ராமதாசும் பேசி வருகின்றனர். உண்மை அதுவல்ல சற்றுக் கவனத்தோடு பார்த்தால் நான்கு அறிய முடியும். இது கிராமப் புற ஏழை மக்களை ஏமாற்றும் வேலை. எப்படி, ஒரு நான்கு மாதங்களில் கிராம புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராம புறமக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆனால், கிராமப் புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம புற சேவை செய்ய முடியும்? மருத்துவமனைகளில் காலியாக உள்ள பனியிடங்களை உரிய மருத்துவர்களை நியமிக்காமல் தற்காகமாக பயிற்சி மருத்துவரை நியமிப்பதன் மூலம் நிரந்தரமாக மருத்துவரை மருத்துவமனையில் நியமிக்க தேவையில்லை. அரசுக்கு செலவும் மிச்சம். மருத்துவரும் அரசாங்க வேலையில் ஒரு வருடம் மட்டுமே பணிபுரிவார். பின்பு அவர் வேலையை இந்து விடுவார். இதனால் அரசு மருத்துவம் அளிக்கும் கடமையில் இருந்து தவகிறது.
மேலும், இத் திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர் தரப்பில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. கல்வி கடன் பெற்று மருத்துவப் படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக வேலைக்கு போகாவிட்டால் கடன் சுமை மேலும் ஏறுகிறது. பட்ட மேற்படிப்புக்கு செல்வதில் பிரச்சினை ஏற்படும். உரிய வயதில், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது. இவை எல்லாம் சொந்த பிரச்சனைகள். கல்வி கடன் அடைப்பதில் பிரச்சனை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும் படியும் எளிய தவனையாகும் படியும், உதவி தொகை அளிக்கும் படியும் கோரலாமே! மேலும் கட்டாய கிராமப்புற சேவை என்பது மருத்துவர்கள் கூறுவது போல ஒருவருடம் இல்லை வெறும் நான்கு மாதமே.இவர்களுக்கு திருமணம் செய்து கொள்வதை எது தட்டுகிறது என்பது தான் புரியவில்லை.
இன்று சமூகத்தில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளியிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் பார்க்கவே கண் கூசுகிறது. அதிலும் கிராமப் புற மருத்துவமனைகளில் சொல்லவே வேண்டாம்.கிராமப்புற மருத்துவமனைகளில் பணியமர்தப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுபேற்க மறுப்பதும்,
பொறுப்பெற்ற பின் விலகுவதும் அல்லது அருகில் உள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதும் நாம் காண்கிறோம்.
இதைவிட கொடுமை ஸ்டான்லி மருத்துவர்களின் போராட்டம் உடல் உழைப்பை கேவலப்படுத்தும் விதமாக குப்பையை கூட்டுவது, மருத்துவமனையை சுத்தம், செய்வது என் தனது மேல்தட்டு வர்க்க திமிறை வெளிப்படுத்தியது மகா கேவலமான செயல். இதே ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி மூளை காய்ச்சலில் இறந்த போது தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடாமல் தங்கள் மருத்துவமனையை சுத்தம் செய்வேண்டியது தானே அப்போது எங்கே போனது இவர்கள் சமூக அக்கறை? இது கூட பரவால்லை சில மருத்துவ மாணவர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் ரத்தத்தை தானம் செய்தனர் இது தானம் செய்பவர்களை கொச்சை படுத்தியது. எத்தனையோ நோயாளிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் தங்கள் ரத்தத்தை தானம் செய்கின்றனர். இனி அவர்கள் எப்படி தானம் செய்வார்கள்? இப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு செலவிடும் மக்கள் வரிப் பணம் சுமார் 10 லட்சத்திற்கு மேல். மக்களின் வரிப் பணத்தில் இளங்கலை பட்டம் பெற்று விட்டு சேவை செய்ய வெளிநாடு சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் கிராமப் புற சேவை செய்ய தயார் என்ற பொய் கோஷம் போடுவார்கள். இவர்களுக்காகவே இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் ஒன்றை இயற்ற தயாராக உள்ளது. அப்படி என்றால் நம் நாட்டவர் எவ்வளவு பேர் அங்கே இருப்பார்கள் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் காலையில் அரசு மருத்துவராகவும் இருப்பார், மாலையில் தனியார் கிளினிக்கில் வேலை செய்வார். இன்னும் சொல்வதென்றால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் கிளினிக்கு வரசொல்லும் மருத்துவரும் உண்டு. சில மாநிலங்களில் ஒரு வருடமோ, இருவருடமோ கட்டாயமாக கிராமப் புற சேவை செய்யவேண்டும். அதனால் தான் தமிழ் நாட்டில் மட்டும் இப் போராட்டம் வெடித்தது.
மத்திய அரசு மருத்துவ துறைக்கு ஒதுக்கும் நீதி 1.3 % (மொத்த பட்ஜேடில்) மாநில அரசு 5.5%. இலங்கை அரசு கூட பொது சுகாதரத்திற்கு இந்தியாவை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கிறது. மருத்துவ பணியிடங்கள் பல காலியாகவே உள்ளன. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் 4 மாதத்தில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் என்னத்த கிழித்து விட போகிறார்கள் .தமிழ் நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர்களில் சுமார் 70 % தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் அரசு மருத்துவராக பணிபுரிந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல். இதில் சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் உள்ளனர். தமிழகம் முழுவது 1,590 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. (2005 ஆம் ஆண்டு ஆய்வு)
1991க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதும்மிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் எண்ணிக்கை 18,671 ஆகும். அது 8வது ஐந்தாண்டுத் திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால் 1997-2002க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் உருவாக்கினார்கள். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா முழுவதும் வெறும் 394 சுகாதார நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இது தான் நிலமை. இதை வைத்துக்கொண்டு தான் அனைவருக்கும் சுகாதாரம் வழங்க போகிறார் “அன்பு” மணி.
உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால்,வேலை உத்தரவாதம் அளித்து இளநிலைமருத்துவரிகளை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் வசிப்பிடம்,வாகன வசதி, போதிய மருந்துகள், மருத்துவ உபகாரங்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், படுக்கை போன்றவற்றை நியமிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பல தனியார் மருத்துவமனைகள் பணம் தின்னும் கழுகாக மாறிவருகின்றன. சட்ட விரோத கருச்சிதைவுகள் தொடங்கி உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்கு புறம்பான அத்தனை செயல்களும் நடக்கின்றன. பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களை பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரனங்கள் வரிச்சலுகை பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவீதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து இந்த சலுகைகள் பெற்றுள்ளன. அதே போல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்க்கொள்வதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் இலவசமாக செய்யப்படவேண்டும். எந்த ஒரு தனியார்
மருத்துவமனை இந்த வாக்குறுதியை நடைமுறை படுத்தியிருக்கிறதா? இது தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது பதில் அளித்த சுகாததரத்துறை இணை அமைச்சர் ” சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறையை மாநில அரசுகள் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
ஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் பிப்ரவரி 22, 2008 in M.B.B.S