RSS

Category Archives: ஜக்கி வாசுதேவ்

டிராபிக் ராமசாமி என்ற அய்யோக்கியன்


டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.

அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். பிறகு ஏன் நீத்தியால் இந்தியாவை மாற்ற முடியவில்லை? ஒரு வேலை எண்ணிக்கை அதிகம் போலும். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார். ஐயா உங்கள்  நீத்தி போல்  ஒரு போதும் விவேகானந்தவர்  பாலியல் வழக்கில் சிக்கியத்தில், ஆடி காரில் ஊர் சுற்றியத்தில் இல்லை, தன்னை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டது இல்லை தனக்கு என்று சொந்தமாக சொத்து சேர்த்தது கிடையாது.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள்.சரி அப்படி என்றால் நீத்தியிடம் உள்ள சுமார் 2000 கோடி உள்ள சொத்துக்கள் அவர் எப்படி சம்பாதித்தார் அதை பற்றி நீங்கள் சொல்லுவீர்களா?  அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.

சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக். ஐயா வழக்கு உன்னாம் முடியவில்லை, தீர்ப்பும் வரவில்லை அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் 

 

குறிச்சொற்கள்:

மநுவின் வாரிசுகள்


“நாங்கள் வித்தியாசமான கட்சி” என்று ஓயாது பீற்றிக்கொள்ளும் பாஜகவின் லட்சணம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருக்கிறபோது மூன்று பாஜக அமைச்சர்கள் அலை பேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பி விட்டன.நாடே கொந்தளிக்கிறது. வேறு வழியில்லாமல் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதியும், மகளிர்- குழந்தைகள் நல அமைச்சர் சி.சி. பாட்டீலும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பலேமரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசும் பாஜகவின் முகமூடி மட்டுமல்ல உடை முழுமையுமே கழன்று விழ நாட்டு மக்கள் முன்னால் நிர்வாணமாய் நிற்கிறது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தன் மனைவி என்று சொல்லி இன்னொருவர் மனைவியை கூட்டிக்கொண்டு போன அசிங்கம் ஏற்கெனவே அரங்கேறி நாடே காறித் துப்பியது. பொதுவாக பாஜகவை காவிக்கட்சி என கூறுவது வழக்கம். ஆசிரமங்களில் சில போலிச்சாமியார்கள் நடத்துகிற காமக்களியாட்டங்கள் வீடியோ காட்சிகளாய் நாட்டையே உறை யவைத்ததுபோல் காவிக்கட்சியும் தன் பங்கை நிறைவேற்றி இருக்கிறதோ?

காதலர் தினத்தன்று இளைஞர்கள் கொண்டாடுவதை பண்பாட்டு விரோதம் என்று கூப் பாடு போட்டு காதல் ஜோடிகளை தாக்குகிற அயோக்கியத்தனம் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும். ஒருமுறை காதல் ஜோடிகளை கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என இந்தக் காலிக்கூட்டம் களத்தில் இறங்கியது. பூங்காவில் பேசிக்கொண்டிருந்த அண்ணன்- தங்கையை கட்டாயத் தாலி கட்ட வைத்த அராஜகத்தை மறந்துவிட முடியுமா? இந்த ஆண்டும் அந்த ‘ராமர்சேனை’ தன் கரசேவையைத் தொடங்கிவிட்டது.

கல்லூரி மாணவிகள் உடை உடுத்துவதில் கூட நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இந்தக் காலி(வி)க்கூட்டம் செய்கிற அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. இப்போது இவர்களுடைய முழு யோக்கியதையும் கண்டு நாடே சிரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ஊழலைப் பற்றி இவர்கள் உரக்கப் பேசுவார்கள். ஆனால் பங்காரு லட்சுணன் முதல் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் வரை பாஜகவுடைய இரட்டை வேடத்தை ஊரறிய படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மதவெறியும், பதவிவெறியும், பணவெறியும், ஒழுக்கக் கேடுகளும் மிகுந்தவர்களுடைய கூடாரம்தான் பாஜக என்பதை ஒவ்வொரு சம்பவமும் நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக்கொள்கையிலும் எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கை இல்லை. சமூகத் தளத்திலும் மிகவும் பிற்போக்கானவர்களே இவர்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும் ஆணின் அடிமைகளாகவும் பார்க்கிற சனாதன மநுவின் பார்வைதான் இவர்களின் அடிப்படைக் கோட்பாடு என்பதால், இவர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் ஆபாசப்படம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த பஞ்சாங்கத்தனம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியவை. மக்கள் இந்த ‘யோக்கிய சிகாமணிகளை’ அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வெறுத்து ஒதுக்க வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

பிரதமருக்கு எல்லா ஊழலும் தெரியும்


சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

“ஸ்பெக்ட்ரம்’ ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது. 

இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது. 

எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்? 

பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 

பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ  எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது. 

ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், “ஜும்’ என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து “ஜும்’ காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான். 

மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி! 

ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த “மெகா’ கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. 

பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன? 

சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி – “”பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!” 

 

குறிச்சொற்கள்:

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என முரசொலி முந்துவது ஏன்?


மதிப்பெண் சான்றிதழ் மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி மருத்துவர் மற்றும் அவரது மகனுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை, மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் நிர்பந்தித்தது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 180 உறுப்பினர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டுகிற அளவுக்கு செல்வாக்குள்ள அந்த மகா மந்திரி யார்? என்று அந்த மனுவில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

ஆனாலும்எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக முரசொலி ஏடு முந்திக்கொண்டு பெட்டிச் செய்தி ஒன்றை எழுதி கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடும் கம்யூனிஸ்ட்டுகள் என்று தலைப்பிட்டு (2.8.2009) கேரளத்தில் பினராயி விஜயனுக்கு ஒரு நீதி, நீதிபதியை மிரட்டிய மந்திரிக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரசாரால் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விரிவான பதிலை பலமுறை தெரிவித்தபோதும், அபாண்டமான குற்றச் சாட்டை அடைகாத்து பொய்க்குஞ்சுகளை அவ்வப்போது பொரித்து வருகிறது முரசொலி ஏடு.

பினராயி விஜயன் ஊழல் செய்தார் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரிஉயர்நீதிமன்றம்சிபிஐ விசாரணைக்குழுஆளுநர் என அனைத்துத் தரப்பும் அடித்துச் சொல்லி விட்டதாக அடித்து விடுகிறது முரசொலி.

மின்திட்ட புனரமைப்பு தொடர்பாக லாவாலின் என்ற கனடா நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது கேரளத்தில் காங்கிரசார் ஆட்சியில் இருந்தபோதுதான். பின்னர் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தத் துணை ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக காங்கிரஸ் அரசினாலேயே மாநில அரசின் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது பினராயி விஜயன் தரப்பில் எந்தத் தவறும் நேரிடவில்லை என அதன் இயக்குநர் அறிக்கை தந்தார். இந்த ஒரேகுற்றத்திற்காக அந்த இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

மத்திய புலனாய்வுத்துறை கூட தன்னுடைய அறிக்கையில் எந்த இடத்திலும் பினராயி விஜயன் பணமோ சொந்த ஆதாயமோ பெற்றதாக குறிப்பிடவில்லை.

பினராயி விஜயன் மீது வழக்குத்தொடர்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதன் அடிப்படையில், மாநில அரசும் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டியதில்லை என ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் காங்கிரசின் கைப்பாவையான ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்து, மாநிலத் தலைமை வழக்கறிஞரின் கருத்தையும் புறக்கணித்து, வழக்கு தொடர அனுமதித்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக்கூட ஆளுநர் கலந்தாலோசனை செய்யவில்லை. யாரோ ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்றதாக கேரள ஆளுநர் கூறினார். அவரின் பெயரை தெரிவிக்கக்கூட ஆளுநர் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த பொய்வழக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சந்திப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்திருக்கிறது.

இதுதான் முரசொலி நீட்டிமுழக்கும் ஊழல் வழக்கின் சுருக்கம்.

ஆளுநரே கூறிவிட்டார், அதன் பிறகு என்ன என்று முரசொலி முழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறனின் கருத்தோவியத்தை முரசொலி ஏடு மறுபதிப்பு செய்து வருகிறது. இதில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசின் அதிகாரங்கள் ஆட்டுக்குத்தாடி என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட ஆளுநரால் எவ்வாறு வெட்டிச்சுருக்கப்படுகிறது என்று விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.

சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் காங்கிரசாரின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு கலைக்கப்பட்ட தருணத்தை தவிர, மற்ற முறையெல்லாம் ஆளுநரின் அறிக்கையைப் பெற்றே மாநில அரசு கலைக்கப்பட்டது. அப்போது அதை திமுக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டித்தது. ஆளுநர் கூறி விட்டால் அதற்கு அப்பீலே இல்லை என்று திமுக தனது நிலையை இப்போது மாற்றிக் கொண்டதா? மாநில சுயாட்சி கோரிக்கையை புதைத்து மலர் வளையம் வைத்துவிட்டார்களா?

இப்போது கேரள ஆளுநரின் முறையற்ற செயலை நியாயப்படுத்தி காங்கிரசாரோடு சேர்ந்து திமுக, “கோவிந்தா! கோவிந்தா!!” என்று குத்தாட்டம் போடுவது ஏன்?

முன்ஜாமீன் வழங்குமாறு தம்மை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது பகிரங்கமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்துதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை நம்பாமல் பிரதமரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் மனுக்கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறது முரசொலி.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மத்திய அமைச்சர் நேரடியாக பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளபோதும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மத்திய அமைச்சர் பேசும் வகையில் செல்போனில் எண்களை அழுத்தி தொடர்பு கொண்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே, அதுகுறித்து விசாரிக்குமாறு கூறுவதில் என்ன தவறு?

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை மட்டும் குரங்குபிடியாக பிடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது ஏன் என்றும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்துவதிலேயே குறியாக இருப்பது ஏன் என்றும் முரசொலி ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. 180 எம்.பி.க்கள் எந்த மத்திய மந்திரியையும் பெயர் குறிப்பிட்டு விசாரணை கோராத போது, முரசொலி இப்படி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பம் போல குதிப்பது ஏன்?

ஆப்பசைத்த குரங்காக இந்த விவகாரத்ல் மாட்டிக்கொண்டது யார்?

இதை பெரிதாகிவிடாமல் அமுக்கிவிட முயல்வது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் 180 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு என்பது வெறும் காகிதமல்ல. பிரதமர் தலையிட்டே ஆக வேண்டிய விவகாரம்.

நீதித்துறை விவகாரத்தில் அரசு எப்படி தலையிட முடியும் என்று மன்மோகன் சிங் ஆணித்தரமாக கூறிவிட்டாரே என்றும் முரசொலி ஏடு கூறியுள்ளது.

போபர்ஸ் வழக்கில் சோனியா காந்தி யின் உறவினர் குவாத்ரோச்சி, சிபிஐயினால் விடுவிக்கப்பட்டபோதுஒரு அப்பாவியை எவ்வளவு நாள்தான் சித்ரவதை செய்ய முடியும் என்று கேட்ட பெருந்தன்மை பெருந்தகையிடமிருந்து அப்போதைக்கு அந்த பதில்தான் வரும். ஆனால் 180 எம்.பிக்களின் கேள்விக்கு பிரதமர் என்ற முறையில் அவர் பதிலளித்துத்தான் ஆக வேண்டும்.

 

புள்ளி விவர பித்தலாட்டங்கள்


காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத் தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்து விட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

 

குறிச்சொற்கள்:

தற்கொலை முயற்சி வெல்லட்டும்


இந்த

தேர்தலிலும் இந்துத்துவத்தையே முக்கியப் பிரச்சனையாக முன் வைப்பதெனத் தீர்மானித்து அதை எப்படிச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தது. அதை அகில இந்திய அளவில் மையவிவாதப் பொருளாக வருண்காந்தி மூலம் சாதித்துக் கொண்டு விட்டது. பாஜகவின் இந்துத்துவ பிரச்சாரத் திட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் இப்போது அதுவால் சாமர்த்தியமாக (அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கிறது) களத்திற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன.

மீண்டும் ராமர் கோவில் என்று சொல்லி வைத்திருந்தது. ஆனால் அது ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு வேளை தேர்தலின் போக்கில் என்ன செய்வார்களோ தெரியாது.

அடுத்ததாக, கிரிக்கெட். பொருளாதாரரீதியாக பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கணக்கு வழக்கின்றி லாபமும், அவை வீசி எறிகின்ற எலும்புத் துண்டிலேயே சில வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகிவிடக் கூடிய சம்பளமும் கிடைக்கக் கூடிய தொழில். ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பாஜகவிற்கு மதவெறி அரசியல் வளர்ப்பதற்கான ஒரு கருவி. தேசிய வெறியைக் கிளப்பிவிடுவதற்கான ஒரு வழி. பாஜகவும் ஊடகங்களும் இப்படியெல்லாம் செய்வது கிரிக்கெட்டின் பால் கோடிக்கணக்கான மக்கள் ஈர்க்கப் படுவதற்கும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்குமான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.

எனினும், இப்போது தேசிய வெறியையோ, மதவெறியையோ கிளப்ப வாய்ப்பில்லை. பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகளை வைத்துக் கொண்டு எப்படி இந்து மதவெறியைத் துாண்ட முடியும்? ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்ப முடியுமே?

தேர்தல் நேரத்தில் இந்தப் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய, மாநில அரசாங்கங்கள் தெரிவித்தன. போட்டியைத் தள்ளி வைக்குமாறு கோரின. முடியாது நாங்கள் வேறு நாட்டில் நடத்திக் கொள்கிறோம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு அடுத்தடுத்து நடக்கவிருக்கிற போட்டிகள் குறித்த பிரச்சனை மட்டுமின்றி, முக்கியமாக கோடிக்கணக்கில் விலை கொடுத்து வீரர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள். வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டார்கள். போட்ட முதலையும், லாபத்தையும் எடுக்க வேண்டிய அவசரம்.

கேவலம் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று மத்திய அரசாங்கம் சொல்வது உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் அது தோல்வியடைந்துள்ளதையே காட்டுகிறது என்கிறது பாஜக. 53 போட்டிகளையும் குஜராத்தில் நடத்துங்கள், நான் பாதுகாப்பு வழங்கத் தயார் என்று வீரவசனம் பேசுகிறார் நரேந்திர மோடி. சரி, சரி இங்கேயே நடக்கட்டும் என்று மத்திய அரசாங்கம் சொல்லட்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இதன்மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் போலும். அல்லது தேர்தல் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டால் அப்போதும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்பலாம் என்று எண்ணுகிறார்களோ என்னவோ? அல்லது போட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போலீஸ் அனுப்பப்படும்போது தேர்தல் பாதுகாப்பில் ஏற்படக் கூடிய பலவீனத்தைப் பயன்படுத்தி தேர்தல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் என்று திட்டமிடுகிறார்களோ என்னவோ? இவற்றில் ஏதோ ஒன்றாகவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.

எப்படியாயினும் உள்நாட்டுப் பாது காப்புப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டார்கள். அடுத்தடுத்து இந்துத்துவத்தையே தன்னுடைய தேர்தல்கூச்சலாக முன் வைக்கிறது. ஏனெனில், அதனிடம் வேறு சரக்கு இல்லை. கடந்த தேர்தலில் தோற்றதற்கான காரணங்களில் இந்துத்துவமும் ஒன்று என்றபோதும் பாஜக இதைத்தான் செய்கிறது. ஒரிசாவில் இந்துத்துவத்தை செயல்படுத்தியதால் பிஜு ஜனதா தளத்தின் நட்பை இழந்தது. இது போன்ற காரணங்களுக்காக ஏற்கனவே பல நண்பர்களை இழந்தது. ஆனாலும், பாஜக இந்துத்துவத்தை விடுவதாக இல்லை. பாஜக தற்கொலைப் பாதையில் மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதுதான்

.

 

இந்துத்துவாவின் பரிசோதனைக்களம் கர்நாடகா


கடந்த

(16.3.09)

ஒன்பது மாதங்களாக, கர்நாடக மாநிலத்தின் கடலோர பிராந்தியங்களில்மதவெறி வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள இந்தப் பகுதியின் வாக்காளர்கள் மத அடிப்படையில் துருவங்களாகி நிற்கும் தன்மை.

இதற்கான காரணங்களைத் தேடி எங்கும் போக வேண்டியதில்லை. மதவெறி கலவரங்கள் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள பகுதிதான் இது என்றாலும், மே 2008ல் கர்நாடகத்தில் முதன்முறையாக பாஜக அரசு அமைந்தபிறகு, வன்முறைகள் தீவிரமடைந்து ஒரு குறிப்பிட்ட வடிவம் எடுத்துள்ளன. சங்பரிவாரத்தின் தத்துவார்த்த செல்லப் பிள்ளைகளான பஜ்ரங்தளம், ஹிந்து விழிப்புணர்ச்சி இயக்கம் மற்றும் ஸ்ரீராம் சேனை ஆகிய இளைஞர் அமைப்புகள் புதுவிதமான தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கியுள்ளன.

சிறுபான்மை மத நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டது, ஆகஸ்ட்செப்டம்பர் 2008ல் உச்சத்திற்குச் சென்றது. மதச்சார்பற்ற கட்சிகள், கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாகத்தான் மாநில அரசு பிப்ரவரி 2009ல் நீதியரசர் பி.கே.சோமசேகரா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்து கலவரங்களை விசாரிக்கப் பணித்துள்ளது.

கலாச்சார வேட்டையின் நூதன வடிவங்களில் இந்துத்துவா அமைப்புகள் இறங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களில் பலவும் வெகுஜன ஊடகங்களில் அரையும், குறையுமாகத் தான் பதிவு செய்யப்படுகின்றன. கலவரக் காரர்களை எதிர்த்துப் போராட சாதாரண மக்கள் முன்வருவதுமில்லை. இந்த அமைப்புகளின் வல்லமையைத் தட்டிக் கேட்க காவல்துறை திராணியற்றும், பல போது அவர்கள் பக்கமாக சாய்ந்து விடுவதுமே காரணம். மாநில அமைச்சர்கள் இத்தகைய சம்பவங்களை ஒரு பொருட்டாகவே கருதாத வகையிலேயே தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றன. (எடுத்துக்காட்டாக, ஜனவரி 24 மங்களூர் ரெஸ்டாரண்டில் ஸ்ரீராம் சேனை ஆட்கள் பெண்களை காட்டுத்தனமாகத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்த உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா, இத்தகைய கேளிக்கை விடுதி கலாச்சாரம் இந்திய பண்பாட்டிற்கு அந்நியமானது என்ற பீடிகை போட்டே சொன்னார்).

வன்முறை வெறியாட்டத்தில் இறங்குவோர் தாங்களாகவே அவற்றை ஒப்புக் கொள்வதுமங்களூர்பப் விஷயத்தில் முன்தகவல் கொடுத்து தொலைக்காட்சி ஊடகத்தை வரவழைத்திருந்தனர்என்பதே அவர்களுக்கு பாஜக ஆட்சி எத்தனை அரவணைப்பை உறுதி செய்கிறது என்பதனை உணர்த்தும். மங்களூர்பப் வழக்கில், ஸ்ரீராம் சேனை தலைவன் பிரமோத் முத்தலிக் உள்பட சம்பந்தப் பட்டவர்களை காவல்துறை, சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்துத்தான் கைது செய்தது. அவர்களும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால், ‘கலாச்சாரக் காவலர்களாக இந்துத்துவா இளைஞர் அமைப்புகள் தாக்கும் பல சமயங்களில், அராஜகம் செய்தவர்களே தாக்குதலுக்கு உள்ளானவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துப்போய் அவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்து தரும் வேலை நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மிகவும் முன்னேறிய வட்டாரத்தில்தான், சகிப்புத்தன்மையற்ற இத்தகைய வெறித்தனம் வேரூன்றி வருகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டு வரிசையில், கேரளத்திற்கு அடுத்தபடியான நிலையில், கர்நாடக மாநிலத்திற்குள் தட்சிண கன்னடாவும், உடுப்பியும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலுள்ள மாவட்டங்களாகும். இவ்விரண்டு மாவட்டங்களிலுமே, நாட்டின் தலைசிறந்த தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மங்களூர், கர்நாடகத்திலேயே தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நகரம்; அதுமட்டுமல்ல, மாநில வங்கித்துறை மையப் புள்ளியுமாகும்.

தட்சிண கன்னடாவில், 2001 விவரப்படி, மக்கள் தொகையில் எட்டு சதவீதமுள்ள கிறிஸ்தவர்கள் உயர்கல்வியில் முக்கிய இடம் வகிக்கிற, வெற்றிகரமானநன்கு ஒருங்கிணைந்த சமூகமாகத் திகழ்கின்றனர். இஸ்லாமியர்கள் 22 சதவீதம், இந்துக்கள் 68 சதவீதத்திற்குச் சற்று கூடுதலாக உள்ளனர். உயர்கல்வி மையங்கள் என்ற வகையில், தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் நாடு முழுவதிலுமிருந்து பத்தாயிரக் கணக்கான மாணவர்களை ஈர்த்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும், உள்ளூரிலும் அன்றாடம் வீட்டிலிருந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும், விடுதிகளுக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயணம் செய்யுமளவு நன்றாகச் செயல்பட்டுவரும் பேருந்து போக்குவரத்து ஏற்பாட்டிற்குள் இந்துத் துவா விழிப்புக்குழுக்களின் கொடிய கரங்கள் ஊடுருவியுள்ளன. பஸ் பயணம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஓர் ஏற்பாடு. சாதாரணமாக அது, பயணம் செய்யும் மாணவரிடையே உள்ள பால், வர்க்க, மத மற்றும் மொழி பேதங்களைத் தகர்க்க வேண்டும். எனவே பேருந்துகள் விழிப்புக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் வந்ததில் எந்த வியப்புமில்லை.

மோசமான ஜனவரி 24 ‘பப் நிகழ்வினை அடுத்து இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தன. பிப்ரவரி 6 அன்று, கேரள அரசியல்வாதி ஒருவரின் மகளும், அவரது நண்பரான இஸ்லாமியர் ஒருவரும் தாக்கப்பட்டனர். பிப்ரவரி 11 அன்று, பஜ்ரங் தளத்தின் நடவடிக்கையை அடுத்து சோகமயமான பின்விளைவுகள் ஏற்பட்டன. முல்கி தாலுகாவைச் சார்ந்த 14வயது பள்ளிச் சிறுமி, முஸ்லிம் பேருந்து நடத்துநர் ஒருவரை நட்பாக்கிக் கொண்டகுற்றத்திற்காகப் பொது மக்கள் எதிரில் அவமானத்திற்கு உள்ளாக நேர்ந்ததைத் தாங்கமாட்டாது தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தில், பஜ்ரங்தள குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா? ‘அவர்களை கைது செய்தால், அந்தப் பகுதியில் மதக் கலவரம் மூளக்கூடும் என்று மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் தொலைக்காட்சி சானலில் விளக்கம் தந்திருக்கிறார்.

மங்களூரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் பஞ்சா கிராமத்தில், உள்ளூர் அரசுக் கல்லூரிக்கு வரும் முஸ்லிம் பெண்கள்பர்தா அணியக்கூடாது என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் கிராமக்கிளை தடை விதித்துள்ளது. இந்துத்துவா சக்திகள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு மாவட்ட காவல் துறை பாரபட்சமற்று செயல்படும் என்ற நம்பிக்கை கிஞ்சிற்றும் கிடையாது. மாநில ஆட்சியை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்குவதில் இதே காவல்துறை உற்சாகம் காட்டுகிறது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக, மங்களூரிலிருந்து வெளிவரும்கரவாலி அலே இதழைக் கொண்டு வரும் சித்ரா பதிப்பகக்குழு தலைவர் பி.வி.சீதாராம் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. அவரது பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது; விநியோக ஏற்பாடு சீர்குலைக்கப்பட்டது; விற்பனையாளர்கள் தாக்கப்பட்டனர்; செய்தித்தாள்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்டன. அவர் கொடுத்த எந்தப் புகாரையும் காதில் போட்டுக் கொள்ளாத காவல்துறை அதிகாரிகள், மதப் பகைமையை மூட்டிவிட்டதாக அவருக்கு எதிராகப் பதிவாகியிருந்த எட்டு கிரிமினல் புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தனர்.

சீதாராம் 2009 ஜனவரி 4ம் தேதி கைது செய்யப்பட்டு கைவிலங்குகளோடு உடுப்பி செசன்ஸ் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார். மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியதோடு, வழக்குச் செலவுகளுக்காக ரூ.10,000/- நஷ்டஈடு கொடுத்தாக வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.

இந்திய அரசியல் அனுபவத்தில், மத ரீதியாகப் பிளவுபட்டு நிற்கும் வாக்காளர்களால் வகுப்புவாத கட்சிகளுக்குத்தான் நிரம்ப லாபம். கடலோர கர்நாடகம் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பது புலனாகிறது. மேற்குக் கடற்கரையின் இப்போதைய நிலைமைக்கும், அயோத்தி இயக்கம் விசிறிவிட்ட– 1991 தேர்தலுக்கு முந்தையஉத்தரப்பிரதேச நிலைமைகளுக்கும் இடையே விபரீதமான ஒற்றுமைகள் உண்டு. தெற்கில் தங்களது விஸ்தரிப்புக்கான விசைப்பலகை கர்நாடக மாநிலம் என்று பாஜக சொன்னால், கடற்கரை பிராந்தியம் தீர்மானமாக அதன் தத்து வார்த்த பரிசோதனைக் களமாகும்.

நன்றிஹிண்டு நாளேடு

 

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்


இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க போவது.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு தொழில் என்ன? வருமானம் என்ன? அது எங்கு இருந்து வருகிறது? இவர்கள் சொத்து என்ன? இவை எப்படி மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது? போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவதில்லை. “தான் இந்த உலகத்தை இரட்சிக்க வந்த கடவுள்என்று கூறிக்கொள்ளும் இவர்கள் மனிதன் உருவாக்கிய சட்டத்திற்க்கு கட்டுப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமியார் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வருமான வரித்துறை 2006 ஆம் ஆண்டே கண்டு பிடித்துள்ளது ஆனால் எவ்வளவு வரி ஏய்ப்பு என்ற விவரத்தை இது வரை வெளியிடவில்லை வருமான வரித்துறை. ஆனால், 16 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அம்பலப்படுத்துகிறது மெயில் டுடே நாளிதழ்.

34419671_1

மோசடி மன்னன்

பா.. ஆதரவு ஆன்மீக அமைப்பான விஸ்வ ஜாகுருதி மிஷன் 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் என்று கூறிக் கொள்வது வழக்கம்.

மும்பையைச் சேர்ந்த மகாவீர் பிரசாத் என்ற தொழிலதிபர் இந்த அமைப்புக்கு 55 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்க்காக வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சான்றிதழ்களையும் இவர் இந்த அமைப்பிலிருந்து பெற்றார். ஆனால், வரி விலக்குக்காக அவற்றை சமர்ப்பித்த போது, அவையனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இவர் அளித்த புகாரின் பேரில் டிச 31.2006 முதல் இந்த அமைப்பை தங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்தது வருமான வரித்துறை. இந்த ஆன்மீக அமைப்பு வைத்துள்ள வருமான வரிக்கணக்கு எண்ணே போலி என்ற அதிர்ச்சிதரும் மோசடி அம்பலமாகியுள்ளது. மோசடி செய்தற்க்காக அமைப்பின் பொருளாளரை 2007ஆம் ஆண்டே கைது செய்தது வருமான வரித்துறை.

இந்த விவகாரத்தை மெயில் டுடே அம்பலபடுத்தியவுடன் உடனே இந்த செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என இந்த அமைப்பின் போது செயலாளர் தேவ்ராஜ் கடாரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் பா... உடன் நெருங்கிய தொடர்புடையவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மோசடி சாமியார் உடன் நின்று போஸ் கொடுக்க பாஜக தலைவர்கள் தவறமாட்டார்கள். தற்போது பொருளாளரையை பலிகாடவாக மாற்றிவிடலாமா என்று மோசடி அமைப்பினார் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை. இது போன்ற அனுபவம் பல உண்டு பா...விற்க்கு.

Visit: http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=2422009

 

குறிச்சொற்கள்:

சார்லஸ் டார்வின்- 200


சார்லஸ் டார்வின்அந்த அசாத்தியமான மனிதர் பிறந்து 200 ஆண்டுகள் முடிந்துவிட்டதையொட்டி உலக அளவில் அவருக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 12ம் நாள் நடைபெற இருக்கின்றன.

அவரை நியூட்டனுக்கு, ஐன்ஸ்டினுக்கு, கலிலியோவுக்கு ஈடாக புகழ்பாடி உலக விஞ்ஞானிகள் விழா எடுக்க இருக்கிறார்கள்.

டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மனித சிந்தனைக்கு ஒரு பெரும் ஒளியை வீசியது, மதகுருக்களுக்கு மருட்சியை, கோபத்தை உருவாக்கியது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பற்றி சனாதனவாதிகள் இரு நூற்றாண்டுகள் ஆன பின்னும் கூட சம்வாதம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டவன் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் முதன் முதலாகப் படைத்து அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருகச் செய்தான் என கிட்டத்தட்ட எல்லா மதங்களும் மூவாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்த, மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்த கோட்பாட்டை சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாட்டின் மூலம் சுக்கு நூறாக உடைத்துவிட்டார். மனிதனும் மிருக இனத்தைச் சேர்ந்தவன் தான், அவனின் முன்னோர்கள் குரங்குகள்தான், பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து உதித்தவன்தான் மனிதன் என்பதை அரிய விஞ்ஞான ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவர். ஆகவே அவரை மத ஸ்தாபனம்நாத்திகர் எனப் பட்டம் சூட்டியது. அவர் மீது கடுமையான தூஷணைகள் வீசப்பட்டன. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஓயாது ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்தத்தில் பதினெட்டு நூல்களை எழுதித்தள்ளினார். அவர் கடைசியாக 1872 ஆம் ஆண்டு எழுதிய நூல்மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சி களை வெளியிடும் விதம் என்பதாகும். ஆனால் அவர் எழுதியஜீவராசிகளின் மூலம்’’ எனும் நூல் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த நூல், மிகப் பிரபல்யமாகிவிட்ட நூல். அந்த நூல் ஹிப்ரு, ஸ்பானிஷ், போலிஷ், ஜப்பான், பொஹிமியன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. அந்த நூல் இங்கிலாந்தில் மட்டும் 5 ஆண்டு காலத்தில் பதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையாயிற்று என்றால் அதன் மகத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு இது.

அந்தப் புத்தகம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்த நூலில் டார்வின் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வின் மூலம் நடைபெறுவதை பல ஆதாரங்கள் கொடுத்து விளக்குகிறார். எந்த ஒரு ஜீவராசியும் இயற்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையென்றால் அவை அழிந்து போகும், அப்படி அழிந்து விட்ட ஜீவராசி கோடானு கோடி! அவையெல்லாம் அப்படி அழியாமல் போயிருந்தால் இந்த பூமியில் அவைகளைக் கொண்டிருக்க இடமே இருந்திருக்காது! குளிர், பனி, மழை, கொடிய வெயில், நீர், நிலம் எங்கெங்கே எந்த ஜீவராசி எந்த புற சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழலை ஏற்று அவை வாழ தங்களைத் தயாரித்துக் கொள்ள பலம் தேவை, மாற்றிக் கொள்ள முயற்சி தேவை! இல்லாது போனால் அழிவுதான் மிச்சம்.

அதோடு ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று போராடி எவை வெற்றி பெறுகிறதோ அது நிலைக்கும், பலவீனமானவை அழியும். அதாவது இயற்கை தேர்வில் பால் உறவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே இன விருத்தி செய்வதற்கான ஒரு தேர்வு முறை நடக்கிறது! தேவையான துணைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஆண்களுக்கிடையே பெரும்பாலும் போட்டியும், போராட்டமும் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் ஆண் தன் துணையைபெண்ணை தேடிக் கொள்கிறது, தன்னைப் போன்ற வலுவான வாரிசை உருவாக்க முடிகிறது, தோல்வியுறும் ஆண் தன் இனத்தை விருத்தி செய்யாமல் பின் தங்கி விடுகிறது.

ஆக டார்வின் பரிணாம கோட்பாடு கீழ்வரும் மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதைநவீன டார்வினியம் என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம், உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது என்கிற இவரின் தத்துவத்தை சில அறிவு ஜீவிகள் அவர் காலத்திலேயே கிண்டல் செய்தார்கள்.

வர்க்க சமுதாயத்தில், திறமை உள்ளவன் வளமாக மூலதனத்துக்குச் சொந்தக் காரனாக வாழ்கிறான், வக்கற்றவன் வறுமையில் வீழ்கிறான்இதுவும் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது தானே என்று கேட்டார்கள்?. மனிதனின் செயற்கை ஏற்பட்டால் ஏற்றப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை இப்படி வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் பாவப்பட்ட மக்களுக்காக எப்போதும் பரிதாபப்படும் குணம் கொண்டவர் டார்வின். அவரின் கப்பல் பயணத்தில் தென்அமெரிக்கா சென்ற போது, அக் காலக்கட்டத்தில் அங்கு நடைபெற்ற ஏழை மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் நொந்து போனார், தன் மனக் கசப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல் அவரின் இரண்டாவது புத்தகமானமனித பரம்பரை நூல் 1871ம் ஆண்டு வெளியானது. மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதுகிறார். நம் மூதாதையர் குரங்குகள் தான் என்று சொல்லுவதில் பெருமை அடைகிறார். கீழ் ஜீவராசியிலிருந்து மனிதன் எனும் உயர்ந்த ஜீவராசியை எட்டியதற்கு அடிப்படை பரிணாம வளர்ச்சியே என்கிறார். 25 ஆண்டுகளாக சதா நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டா லும் இதற்கான ஆய்வில் அவர் வெற்றி கண்டார்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் அந்த காலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து மாறி இப்போதுள்ள தோற்றத்தை அடைந்துள்ளன என்ற முடிவுக்கு வருகிறார். அதே போலத்தான் மனிதனும் கூட இன்றைய நிலையை அடைந்துள்ளான்.

உராங்குட்டன், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும், ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து, சீர் பெற்று, திருத்த முற்றுத் தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.

மனிதன் வலதுகால் அடியெடுத்து வைக்கும் போது அவனுடைய இடதுகை முன்னே செல்லுகிறது. வலது கை முன்னே வீசும் போது இடதுகால் அடி யெடுக்கிறது. குரங்கும் இதே ஸ்டைலில் தான் நடக்கிறது.

எல்லா ஜீவராசிகளும் உருவாவதற்கு முன்பாக நீரும், நிலமும் தழுவிக் கொள் ளும் கரைகளில் முதல் முதலாக உருவெடுத்த மூதாதையின் பெயர், அந்த உருவத்தின் பெயர்நீர்பாசிதான். ஜீவராசிக் கெல்லாம் மூலாதாரமாய் விளங்கியதும் அந்த நீர்பாசி தான். அது இன்றைய கொடி, செடி, மரங்களாகவும், மிருகமாகவும், மனித இனமாகவும் பரிணாமம் கொண்டது.

டார்வின் ஐந்தாண்டு காலம் அதாவது 1831ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி எச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலில் பயணம் செய்து தென் அமெரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளில் ஆராய்ச்சி செய்தார். உயிரியல், நிலஇயல் பற்றி ஆராய்ச்சி செய்தார். தாவரங்கள், பிராணிகள், பறவைகள், பாறைகள்என அவற்றைப் பற்றி பல விவரங்களைச் சேகரித்தது, அவரின் உச்சகட்ட பரிணாம தத்துவக் கோட்பாட்டுக்கு உதவி புரிந்தது.

அவரின் இந்த வினோதக் கண்டு பிடிப்பு பொருண்மைவாதிகளுக்கு, கடவுள் மறுப்பாளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு தத்துவ ஆயுதமாகக் கிடைத்தது. ஆனால் டார்வின் நாஸ்திகர் அல்லர். ஆனால் ஆஸ்திகர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள். இது ஒரு வினோதம் தான். கிறிஸ்தவ மதத்தைத் துறந்து விட்டார். அவர் தன்னை அறியொணாமைக் கொள்கையாளர் என்றார். அப்படியானால் அவரின் மதக் கொள்கை தான் என்ன? அவர் மதகுருவாக ஆக மதக் கல்வி படிக்கச் சென்றவர்! ஆனால் மதக் கல்வி பிடிக்காது திரும்பி வந்து விட்டார். கடைசியாக எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டமும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் பட்டமும் பெற்றார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டு பிடிப்பான பரிணாமத் தத்துவத்துக்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வி.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறுவகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்.

மனித இன மூதாதையரின் முகவரியை உலகத்துக்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஏப்ரல் 19ம் தேதி அடங்கிப் போனார்.

லண்டனில் விஞ்ஞானிகளின் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் உள்ள இடுகாட்டில் விஞ்ஞானிகள் புதைக்கப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அப்பீ எனும் இடத்தில் நியூட்டனின் கல்லறைக்கு சில அடிகள் தள்ளியும், வானஇயல் விஞ்ஞானி சர்ஜான் எர்ச்செட் கல்லறையின் அருகிலும் டார்வின் புதைக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தியே. அதற்காக அவருடைய நெருங்கிய விஞ்ஞான நண்பர்கள் இதற்காகப் போராடித்தான் அந்த சலுகை பெற்றார்கள் என்ற தகவலும் உண்டு!

 

குறிச்சொற்கள்:

பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை ஒழிக்க வேண்டாமா?


தில்லைக் கோவிலில் தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்திவரும் பின்னணியில் 1987ம் ஆண்டு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. அதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் அந்த நியமனம் தொடர்பாக மறுஆய்வு நடத்த ஆணையிட்டது. அதன்படி மறு ஆய்வு மேற்கொண்ட அரசின் இந்து அறநிலையத் துறை ஆணையர், அந்த நியமனம் சரியானதே என்று அறிவித்தார். தீட்சிதர்கள் அதை எதிர்த்தும் முறையீடு செய்தனர்.

நீதிமன்ற ஆணையின் படி மறுஆய்வு செய்த அரசுச் செயலரும், நிர்வாக அதிகாரி நியமனம் சரியான நடவடிக்கையே என்று உறுதிப் படுத்தினார். இப்படியே 2006ம் ஆண்டு வரையில் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சனை அலைபாய்ந்து வந்தது. 2006ல் தீட்சிதர்கள் மறு முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு, சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதற்கான போராட்டம் நடத்தி வரும் ஆறுமுகசாமி கோரிக்கை விடுத்தார். அவர் சார்பில் மனித உரிமைக்கழகம் வழக்கை நடத்தியது. இக்கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜூ அரசு நியமனத்திற்கு ஆதரவாக வாதாடினார்.

திங்களன்று வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டது செல்லும் என்று கூறி, ஒருவார காலத்திற்குள் அதிகாரியிடம் ஆலய நிர்வாகத்தை தீட்சிதர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிபதி, அதில் தீர்ப்பு வரைமுறையில் அதிகாரி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தீட்சிதர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.

இதன்படி ஒரு வார காலத்திற்குள் சிதம்பரம் கோவிலின் நிர்வாகம் அரசு அதிகாரியின் பொறுப்பில் வருகிறது.

உண்மை

தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது.பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோதுதில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை. ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது.

இப்போது அரசு கையில் கோவில் நிர்வாகம் சொல்லும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும்.அப்போது இந்த பார்ப்பணின் பித்தலாட்டங்கள் வெளிவரும்.

 

குறிச்சொற்கள்: