மார்ச் 2ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதியில் முதல் முறையாக தேவாரம் பாடப்பட்டது. இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியவர் சிவனடியார் திரு.ஆறுமுகம் சாமியார் அவர்கள். இது சாதாரண சாதனை அல்ல. சிவனடியார் அவர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இதற்கு தடையாக இருந்தவர்கள் யார் தெரியுமா? தமிழர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பார்ப்பனியர்கள். கறையான் புற்று கட்ட அதில் கருநாகம் குடிக்கொள்ளும். அதுபோல, அன்று உழைக்கும் மக்களால் கட்டப்பட்ட இந்த நடராஜர் கோயிலில், ஒரு கல்லை கூட எடுத்து வைக்காத பார்ப்பனிய கும்பல், கோயில் தனக்கு சொந்தம் இதில் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறிவருகிறது.
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் முதலிய பக்திப் பாடல்கள் எல்லாம் ஒலித்த தில்லைகோயில் திருசிற்றம்பல மேடையில் பலகாலம் பாடப்பட்டு வந்தது. இது கருவறையில் நுழைவேன், அங்கு பூஜை செய்வேன் என்று யாரும் போராடவில்லை தீட்சிதர்கள் தங்கள் பூஜையை முடித்ததும் திருசிற்றம்பல மேடையில் பாடுவேன்
என்று தான் ஆறுமுகசாமியார் போராட வந்தார். ஆனால் தீட்சிதர்கள் திருசிற்றம்பல மேடையில் பாடாதே வேண்டுமானால் பிரகாரத்தின் கீழே இருந்து பாடிக்கொள் என்றனர். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமானது. இப்படி சொல்ல தீட்சிதர்களுக்கு உரிமை உண்டா, என்று பார்த்தால் இல்லை. அதற்கான காரணம்,
ஏனென்றால், சிதம்பரம் கோயில் ஒரு பொதுக்கோயில் இதில் தீட்சிதற்கு மட்டும் உரிமை இல்லை என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு இந்த பிரச்சனையில் தலையிட உரிமை உண்டு. திருசிற்றம்பல மேடையில் தீட்சிதர் தான் தொன்று தொட்டு திருமறைகளை ஓதி வருகிறார்கள் என்பது தவறு. ராஜராஜ சோழன் காலத்தில் தான் திருமறைகள் தொகுக்கப்பட்டன. எனவே தொன்றுத்தொட்டு என்ற வாதம் ஏற்க முடியாது. அந்நிய படையெடுப்பு, சைவ, வைணவ பிரச்சனைகளின் போது நடராஜர் திருக்கோயில் பூஜைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. கால பூஜை நேரம் தவிர அனைவரும் மேடையில் நின்று வழிபடலாம். தீட்சிதர் வாயால் தமிழ் வந்தால் புனிதம் கெடாது, மற்றவர்கள் வாயால் தமிழ் வந்தால் புனிதம் கெடும் என்பது சுத்த பொய். திருவண்ணாமலை, திருவானைக் காவல் கோயிலில் ஓதுவர்கள் கருவறை முன்பாகவே நின்று தான் பாடுகிறார்கள் ஒதுங்கி நின்று பாடுவதில்லை.அங்கு மட்டும் புனிதம் கெடவில்லையா? தட்டில் பல்வேறு மக்கள் காசு போடுகிறார்கள். அதை தொட்டு எடுக்கும் போது தீட்டு வராத?
தீட்சிதர்கள் கருவறையில் எப்படி ஆராதனை செய்யவேண்டும். என்ன கிரியைகள் செய்யவேண்டும் என்று ஆலோசனை கூற அனுமதி கேட்பதில்லையோ, அதேபோல் பக்தர்களுக்கு வழிபட இவர்கள் ஆலோசனை கூறத்தேவையில்லை. ஓதுவார்கள் நியமிக்கப்பட்டதே திருமறைகளை உரக்கப்பாடுவதற்குத்தான். அது பூஜையின் ஒரு அங்கம். கால பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் திருசிற்றம்பல மேடைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் போது, அப்போது யாரும்பாடாதே என்று சொல்ல முடியுமா? சொற்றமிழால் எமைப்பாடுக என்று பக்தர்களுக்கு தானே சிவன் சொன்னான்? நாயன்மார்கள் சிற்றம் பல மேடையில் பாடியதாக வரலாறு சொல்கிறதே?
சிதம்பரம் கோயிலை தரிசிக்க செல்லும் மக்களிடம் கோயிலில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என கேட்டால் பலருக்கும் விடை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ஒன்றா, இரண்டா எவ்வளவோ ரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. ஏதோ எனக்கு தெரிந்த ரகசியங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜாரை தரிசிப்பதற்காக சென்றவர்களை கொன்ற சம்பவமே சிதம்பர ரகசியம் ஆகும். இதில் முதலில் கொலை செயப்படடவர் அப்பர் என்கின்ற திருநாவுக்கரசு ஆவார். முதலில் இவர் எப்படி கொலை செய்யப்பபட்டார் என்பதை பார்ப்போம்
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவ சமயத்திற்கு மாறிச் சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.
“என்றும் நாம் யாவருக்கு மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக் கெதிராய்எவருமில்லை
சென்று நாம் சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந் திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய புண்ணியத் துளமே” (அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில் ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.
இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவது அப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்து திட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறு தெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் , நம்முடைய அறமல்ல. என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டை என்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார். அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரை முகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப் பரவச் செய்யினும், கொல்லாமையை போதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு அளவிடாது என்று கூறினார்கள். இம்மொழியை கேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன் தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ! தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன் பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்த பார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர் வலையில் வீழ்ந்தொமே!” என்று கண் கலங்கினார். சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தை கண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன் உம்மை இன்று ஆட்கொண்டான் என்று நினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம் நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவை இடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப் பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்த ஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார். திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்த அந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவு செய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களை பாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படி அப்பர் உள்ளே நுழைந்ததும் கதவை முடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன் கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்கு அப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார் என்று கூறிவிட்டனர். உள்ளே நுழைந்த அப்பரை அங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்று புதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்து விட்டனர். அப்பரின் இறுதி (முடிவு) பற்றி பெரியபுராணத்தில் சரியான விளக்கம் சொல்லாமல் மழுப்புகிறது.
நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொரு
நாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை. அதனாலே, இவர் “திருநாளைப் போவார்” எனப் பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர். நந்தனின் தொல்லை பொருக்ாத பார்ப்பன நரிகள் சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும் என்றனர்.
நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான். பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டு தீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு என்றனர். அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர். சதி செய்து கொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான் யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்று வரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட நீங்கள் நேரில் பார்க்கலாம். நந்தன் நுழைந்த வழி தீட்டு பட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்த வழியை முடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.
ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.
இது அத்தனையும் படித்த பாரதி சூத்திரனுக்கு ஒரு நீதி தண்ட சோறு உண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி என்று சாத்திரம் சொல்லுமாயின் சாத்திரம் அல்ல சதி என கண்டோம் என எழுதினான்.