கர்நாடக முதல்வர் எடியூரப்பா நலமுடன் இருப்பதற்காக கோவில்களில் தினசரி பூஜை நடத்த வேண்டும் என்று அம்மாநில அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாஜக அரசில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவியேற்றிருப்பவர் கிருஷ்ணயா ஷெட்டி. இவர் மாநில அறநிலையத்துறை ஆணையர் டி.ஷாம் பட்டை அழைத்து, முதல்வர் நலமாக இருக்க வேண்டி, அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தினசரி பூஜை நடத்த உத்தரவிடுமாறு கூறினார்.அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்ளுக்கு உத்தரவு அனுப்பினார்.
அதன்படி, 34,000 கோவில்களில் தினசரி முதல்வர் பெயரில் பூஜை நடத்த உத்தரவு போனது. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தின.
மேலும், கர்நாடக சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிவர்மகுமாரின் மகளும்,வக்கீலுமான பெல்லி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த கோயில்களில் பூஜை செய்வதற்கு உண்டான செலவு அத்தனையும் மக்கள் தலையில் தான் விழும். மக்களின் வரிப்பணத்தில் பல சமுதாய செயல்களையும், வளர்ச்சி திட்டத்தை செய்யாமல் இது போன்ற செயல்களை பாஜக செய்வது ஒன்றும் வியப்பெதும் இல்லை. இது வெறும் ஆரம்பம் மட்டுமே!