ராஜாவின் புதிய ஊழல்

ஜூன் 12, 2008

புதிய பொருளாதாரம் என்றால் என்ன?

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 11:04 மு.பகல்

 

 

 

விலைவாசிகள் விண்ணைத் தொடுமளவுக்குப் பறக்கின்றன. பண வீக்கமோ அரசின் கட்டுப்பாட்டை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 3ம் தேதி பண வீக்கம் 7.83 சதவிதமாக இருந்தது. கடந்த 44 மாதத்தில் இதுதான் அதிகம் என்கிறது மத்திய அரசு. 5 சதவீதம் வரை அனுமதிக்கலாம். அதற்கு மேலே போனால் நாடு தங்காது என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்.

பிரதமர் மன்மோகன் சிங் சிமெண்ட் உற்பத்தி செய்யும் முதலாளிகளிடம் கெஞ்சி பார்த்தார் அவர்களும் முட்டைக்கு ஏழரை ரூபாய் வரை குறைபதாக சொல்லியிருக்கிறார்கள். உருக்கு விலையை குறைக்க அவர்கள் காலிலும் விழுந்து எழுந்ததினால் அவர்களும் விலையை குறைப்போம் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள். உயர்த்தும் போது ஏகத்தாளமாக உயர்த்திவிட்டு குறைக்கும் போது கடுகளவுக்கு குறைக்கிறார்கள். இதனால் பண வீக்கம் எப்படி குறையும்? விலைவாசி எப்படி குறையும்?

இந்த விலை உயர்வுக்கும்-பண வீக்கத்துக்கும் அடிப்படை காரணம் எது?

உலகமயக் கொள்கை தான். உலக பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரத்தை இணைத்ததால் ஏற்பட்ட கேடு இது. அப்படி இணைத்ததால் சர்வதேச பகாசுரர்களின் பணம்-நிதி முதலீடு என்ற பெயரில் நமது நாட்டுக்குள் நுழைந்தது. நுழைக்கிறது. இப்படி உலகம் முழுவதும் தங்கு தடையின்றிப் பாயும் பணம் ஊக வாணிபத்தில் ஈடுபடுகிறது. அது தான் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. விலைகளை உயர்த்துகிறது. இந்த பணத்தை கொண்டு கொள்ளையடிக்க முடியாது என்று தெரிந்தாலோ, அரசு அதற்குக் கட்டுப்பாட்டு விதித்தலோ இந்த முதலீடு ஓடி மறைந்துவிடும். அப்போது அந்த நாட்டுப் பொருளாதாரம் படுத்துவிடும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அண்மை அனுபவம் இது.

இந்த நிதி அல்லது பணம் தொடர்ந்து இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பகாசுரர்கள் எதிர் பார்க்கிறார்கள்?

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்திக்கும், வரிக்கும் இடையே உள்ள விகிதச்சாரம் குறைவாக இருக்கவேண்டும். அதாவது லாபத்துக்கு ஏற்ப வரி இருக்கக்கூடாது என்று அர்த்தம். வரி வருவாய் குறையும்போது அரசின் செலவினங்களும் குறையும். மக்கள் நலத் திட்டங்கள் வெட்டப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறையும். நலிவற்றோர் நலத் திட்டங்கள் இரக்கமின்றி குறைக்கப்படும். இதைத் தான் இந்திய அரசு செய்கிறது.

இந்த பகாசுரர் பணத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அடுத்த நிபந்தனை என்ன?

உள்நாட்டு உற்பத்ியை முடக்குதல் அல்லது அழித்துவிடுவது. இன்று இந்தியாவில் உள்நாட்டுப் பொருள் எதையாவது பார்க்க முடிகிறதா? எல்லாமே இறக்குமதி. உள்நாட்டு உற்பத்தி இல்லை. அதனால் வேலை வாய்ப்பு சுருங்கிவிட்டது. இப்படி குவியும் மூலதனம் வளரும் நாடுகளில் பங்கு மார்க்கெட் மூலதனம் குவியக் குவிய அது புகுந்து விளையாடும். அதன் விளைவாக அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். அதுதான் இப்போது நமது நாட்டிலும் நடந்துகொண்டுருக்கிறதது.

ஆடம்பரப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதால் மக்களிடையே அவற்றின் மீது மோகம் அதிகரிக்கும். அதற்காக குறுக்கு வழியில் பெரும் பொருளிட்ட திடீர் பணக்காரர் ஆகிவிட ஆசை வரும். இப்போது நாம் காணும் தங்கக்காசு மோசடி உள்ளிட்ட மோசடிகளுக்கெல்லாம் அதுவே அடிப்படை. இது கலச்சார சீரழிவின் முதல் கட்டம். இதன் காரணமாக உள்நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பு குறைந்து அதன் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு தொழில்கள் நசியும்.

அடுத்த அம்சம் என்ன? சிறு வணிகர்கள்சிறிய தொழில்களை பெரு முதலைகள் கபளீகரம் செய்வார்கள். அந்நிய முதலீடு இதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் சிறு வியாபாரிகள்விவசாயிகள் எல்லோரும் அழிவார்கள். மக்களின் வாங்கும் சக்தி குறையும். இது உற்பத்ியை மேலும் அழுத்தும். இதன் விளைவாக அந்த நாடு ஏதாவது வளர்ச்சி அடைந்த நாட்டை நம்பியிருக்கும். இப்போது காலனி ஆக்காமலே ராணுவ பலத்தைப் பிரயோகிக்காமலேயே ஒரு நாட்டை அடிமைப் படுத்திட முடியும்.

ஆனால் மன்மோகன் சிங் அரசு வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. It is late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. என்றுமே செய்யாமல் விடுவதை விட தாமதமனாலும் செய்து விடுவது சிறந்தது என்று இதற்கு பொருள். இப்போது தாமதமாகிவிட்டது என்றாலும் நாட்டை மீட்டெடுக்க தேவையான அவகாசம் உண்டு. செய்யுமா மன்மோகன், சிதம்பரம் கும்பல்?

1 மறுமொழி »

  1. new

    Comment by bala — ஜூன் 12, 2008 @ 8:14 பிற்பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.