மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஜூன் 9, 2008

தமிழக கோமாளியா விஜயகாந்த்?

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:18 பிற்பகல்

நாமக்கல்லில் பல்வேறு கட்சிகளில் இருந்து பலர் தேமுதிகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் விஜயகாந்த் பேசுகையி்ல்,

நன்றாக சிந்தித்து பாருங்கள். காமராஜர் 3 முறையும், எம்.ஜி.ஆர். 2 முறையும் தொடர்ச்சியாக முதல்வர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது திமுக, அதிமுக ஆட்சி தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஏன்?.

அது

நாங்க பண்ண தப்பு இல்ல; எங்க முன்னோர்கள் பண்ணது?

தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும். மக்கள் தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

அப்ப

உங்க ஆட்சி வராதூன் சொல்றீங்க!

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1998ம் ஆண்டு ரூ. 450 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. அப்போது நிறைவேற்றாததால் இந்த திட்ட மதிப்பு இன்று ரூ. 1,300 கோடியாக உயர்ந்துவிட்டது.

நீங்க

அப்பவே குரல் குடுத்து இறுதிங்கினா திட்டம் நிறைவேறி இருக்குமே? என் குடுக்கல? ! ஐம் வெரி சாரி நீங்க அப்ப கட்சி ஆரம்பிக்கல இல்ல!!!

நாமக்கல் கோழி, முட்டை உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் கோழித் தீவன மூலப்பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு தீவனம் கிடைப்பதில்லை.

இதேபோல் விவசாயிகளுக்கு உரம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

எப்படி

பெட்ரோல் விலை குறைய பழநியில் தங்கதேர் இழுத்ிங்களோ இதுக்கும் ஒரு வாட்டி தங்கதேர் இழுத்ிங்கினா விலை குறையும் தலைவா!

நான் சட்டசபையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடையில் நின்றுவிடும் நிலை உள்ளதாகக் கூறினேன். அப்போது மறுத்தவர்கள் இன்று அதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மார்க் குறைவாக பெறுகிறார்கள். அதற்கு காரணம் நிர்வாகம் சரியில்லாதது தான். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம்.

ஆமாம்

தலைவா உங்கள மாதிரி அவங்களும் கோடி கோடியா வாங்குறாங்களா? இல்ல, ஆசிரியர்களுக்கு எப்ப சம்பளத்த உயர்த்ினாங்க?

முதலில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும்.

ஆனா

காலேஜ் மட்டும் ஆண்டால் அழகர், வெங்கடேசுவரலா மட்டும் தான் படிக்கணும்.

கவர்ச்சிகரமான திட்டங்கள் வேண்டாம், வளர்ச்சிகரமான திட்டங்களை நிறைவேற்றுங்கள். பெண்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும். அதுபற்றி கேட்டால் கொள்கை ஒத்துப் போவதாக கூறுவார்கள்.

நீங்களும்

பல கட்சியோடு கூட்டணி பேசநீங்க ஆனா யாரும் ஒத்து வரல மக்களோடு மட்டும் தான் கூட்டணி சொன்னீங்க, நாளைக்கு யார் கூடயாவது கூட்டணி வைச்சா அதுக்கு தான் இந்த பதிலா( நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும். அதுபற்றி கேட்டால் கொள்கை ஒத்துப் போவதாக கூறுவார்கள்)

நான் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி கொடுப்பேன். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். போலி ரேசன் கார்டுகள் ஒழியும். படிக்காத இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன். என்னை பொருத்தவரையில் நாளை நமதே, நாற்பதும் நமதே.

இது

எல்லாம் கவர்ச்சி திட்டம் இல்லையா எல்லாம் கவர்ச்சி திட்டம் இல்லையா

?

பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. கரும்பில் இருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலக்கும் தொழிற்சாலைகள் இல்லை. அவ்வாறு கலந்து விற்பனை செய்தால் நிச்சயமாக விலை குறையும்.

அப்ப

சக்கரைக்கு எங்க போறது?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.