மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஜூன் 2, 2008

எடியுரப்பா ஆட்சிக்கு திடீர் ஆபத்து

கோப்பு வகை: R.S.S — குறிச்சொற்கள்: — lightink @ 9:29 மு.பகல்

கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வெள்ளியன்று பதவி ஏற்றார். முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் மைசூர் சென்று வழிபாடு செய்தார். வெள்ளியன்று நள்ளிரவில் 2.30 மணிக்கு அவர் வீடு திரும்பினார். அவரது வீட்டில் ஓமகுண்டம் வளர்க்கப்பட்டு தடபுடலாக பூஜை நடந்தது. இதை தொடர்ந்து அவர் மல்லேசுவரம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் பதவியேற்பதற்கு சூரியநமஸ்கார பூஜை செய்தார். முதல்வர் அறைக்குச் சென்றவுடன் நாற்காலிக்கு பூஜை செய்வதோடு அங்கு சிறிய வடிவிலான விநாயகர் சிலையை வைத்தும் வழிபாடு நடத்தினார்.

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதன் பிறகு தான் எடியுரப்பாவிற்கு பிரச்சனையே. காரணம், அவரின் ஜோதிடர் கே. என். சோமையாஜி சொன்னதுவெள்ளை வேட்டியை பஞ்ச்சகச்சம் போல கட்டிக்கொண்டு, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பச்சை சால்வை அணியவேண்டும். இதற்கு மாறாக எடியுரப்பா பேண்ட், சட்டை அணிந்து கொண்டு பதவி ஏற்றுள்ளார். அடுத்து, சோமையாஜி சொன்ன நேரத்தில் பதவி ஏற்காமல் வேறொரு நேரத்தில் பதவி ஏற்றுள்ளார். இது அவரது பதவிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்து உள்ளார் ஜோதிடர் கே. என்.சோமையாஜி.

எனினும் வேறொரு ஜோதிடர் சொன்ன அடிப்படையில் தான் எடியுரப்பா பதவியேற்கும் போது பேண்ட், சட்டை அணிந்து இருந்தார் என்றும், நல்ல நேரத்தில் தான் பதவியேற்றார் என்றும் அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த விஷயம் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது என்பதை பற்றி பேச எடியுரப்பாவை இன்று நடைபெறும் டெல்லி கூட்டத்திற்கு அவசியம் கலந்து கொள்ளும்மாரு பாஜக மேலிடம் எடியுரப்பாவிற்கு கட்டளை இட்டுள்ளது

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.