வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல் முறையாக எஸ்.ஆர்.எம்.யு. (SRMU) தொழிற்சங்க தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்சிகளும் தொழிற் சங்கம் நடத்தி வருகின்றன. சில பூஸ்வா சிந்தனை உள்ளவர்கள் தலையை ஆட்டும் மனிதர்களை வைத்துக் கொண்டு சங்கங்களை நடத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு தொழிற்சங்கம் தான் எஸ்.ஆர்.எம். யு. இந்தியாவில் அதிகம் படித்த மக்கள் கொண்ட மாநிலம் கேரளா. இந்த கேரளா மாநிலத்தின் எஸ்.ஆர்.எம்.யு அமைப்பின் மாநில தலைவராக இருப்பவர் பிரசன்னா. இவர் திருவனந்தபுரம் ரயில்வேயில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணியற்றுக்கிறார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் உள்ளது. ஆனால், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு,அடியாட்கள் பலம் இவற்றை வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி புகார்களை விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துவர். இல்லை, புகார் குடுத்வரை மிரட்டி புகரை வாபஸ் பெற வைத்து விடுவார். இவரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டி இட முடியாது. இவர் நியமிக்கும் ஆட்கள் தான் சங்க நிர்வாகிகள் அப்படி ஒரு ஜனநாயக புலி இவர். இடம் மாறுதல், பதவி உயர்வு, வேலை நியமனம், புதிய பணி இடங்களில் ஆட்களை நியமித்தல் எல்லாம் இவர் கண் அசைவில் கண கச்சிதமாக நிறைவேறும்.
இதனிடையே பிரசன்னா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் சி.பி.ஐ அதிகாரிகள் கொல்லத்தில் உள்ள பிரசன்னா வீட்டை சோதனையிட்டனர். அப்போது இரண்டு கோடி ரூபாய் சொத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கொல்லம் அருகே பரலுரில் புதியதாக கட்டியுள்ள அவரது வீடு, வங்கி கணக்கையும் சோதனை செய்ததில் மேலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவர் மனைவியின் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்தும் உள்ளது. அவையும் கணக்கிட சி.பி.ஐ.க்கு உத்தரவு இடப்பட்டு உள்ளது. இவரைப் போல அதிகாரம் படைத்த பல தலைவர்கள் டாடா சுமோக்களில் தொண்டர்கள் புடை சூழ
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் தன்னுடைய பாவங்களை இரட்சிக்க வந்த கடவுள் என்று தொழிலாளி வர்க்கம் நம்பிக் கொண்டு இருக்கிறது.
இறுதியாக பிரசன்னா இரும்பு கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். பல தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி கொழுத்த பிரசன்னாவை சுற்றி அவருடைய இரத்தத்தை உறிஞ்சுவதர்காக கொசு மட்டும் சுற்றி வருகிறது