ராஜாவின் புதிய ஊழல்

மே 5, 2008

விஜயகாந்தின் உளறல்

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்:, — lightink @ 4:12 பிற்பகல்

தமிழ் சினிமாவில் அதிக வசனம் பேசுவது யார் என போட்டி வைத்தால் அதில் நிச்சயம் விஜயகாந்திற்கு முக்கிய இடம் இருக்கும்! அந்த அளவிற்கு அவர் போடும் கணக்குப் பட்டியல் மிமிக்ரி கலைஞ்சர்களின் நாவிற்கு தீனியாகிப் போனது. அந்த அளவு பேசுவார்!

சில மாதங்களுக்கு முன் நான் யாருடனும் தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்ளமாட்டேன், தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் வாங்கிய மரண அடியின் காரணமாக, தற்போது கண்டபடி உளற ஆரம்பித்து உள்ளார்.

டெல்லியில் தனது கட்சியின் அலுவலகத்தை திரந்து வைத்த போது இந்தியாவில் மதவாத கருத்துக்களை பரப்பி மக்களை கூறு போட்டு ஆட்சியில் அமர துடிக்கும் பாஜகவுடன் கூட்டு சேர தயார் என அறிவித்துள்ளார். இதோடு விட்டால் பரவ இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து உள்ளத்தால் தனது அரசியல் அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக் காட்டி உள்ளது. அதோடு விடாமல் கூட்டணி கட்சிகள் இவரிடம் எழுதி தரவேண்டுமாம்! விஜயகாத்தின் டில்லிப் பேச்சு காமெடி என்றால் சன் நியூஸ் அதைபிளாஷ் நியூஸ்என்று போட்டு பதட்டப்படுத்தியது சூப்பர் காமெடி.

அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக உள்ள பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எதுவும் தெரியாமல் அறியாப்பிள்ளையாக அறிவித்துள்ள விஜயகாந்தின் கட்சிக்கு என்ன கொள்கை உள்ளது என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த அழைப்பு என்பது ஆட்சிக்காக எதையும் செய்ய தயார் என்று சொல்வதன் மூலம் இந்தியாவில் உள்ள ட்டு பொறுக்கி கட்சியில் தேமுதிகவும் சேர்ந்து விட்டது. தெய்வத்துடன் மட்டும் தான் கூட்டணி என்று சொன்ன விஜயகாந்த் இப்போது எந்த தெய்வம் கூட்டணி அமைத்து கொள்? என்று சொன்னது தான் தெரியவில்லை.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.