உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் பேசுகையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம். இரு நாடுகளில் உள்ள மக்களும் அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். சத்தான உணவு வகைகளை அவர்கள் அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். இதனால்தான் உணவு தானியங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்
நேற்று மிசெளரியில் அதிபர் புஷ் பேசுகையில், இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இப்போது சத்தான உணவு வகைகளையே அதிகம் விரும்புகின்றனர். இது அமெரிக்காவை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.
இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் தேவை அதிகம் என்பது, அமெரிக்காவின் தேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். தேவை அதிகரிப்பதால் விலைவாசியும் உயருகிறது. உணவுக்கு நெருக்கடியும் ஏற்படுகிறது.
மேலும், இந்தியாவில் உள்ளவர்கள் ஐந்து வேலை சாப்பிடுகிறார்கள். இந்தியர்களுக்கு இரண்டு வயிறு உள்ளது, இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளத்தால் உடனடியாக போர் தொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்திய அரசாங்கம் எப்படி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியாதோ அதேபோல் நடு தர மக்களையும் கடன் வலையில் சிக்கவைக்க வேண்டும்.இந்திய மக்கள் அமெரிக்க உணவான பீசா, பர்கர், கோக், பெப்ஸி, சேன்ட்வெஜ், போன்றவற்றை அதிகமாக சாப்பிடாமல், வெறும் அரிசி, கோதுமை, காய், கரிகலை அதிகமாக ஊட்கொல்கிறார்கள்.இந்திய மக்கள் 70 கோடி பேர் தினமும் ஒருவேளை மட்டும் 100mlக்கு கஞ்சி குடிக்கிறார்கள். என்று கூறியுள்ளார் புஷ்.