ராஜாவின் புதிய ஊழல்

ஏப்ரல் 1, 2008

பறவை காய்ச்சலும், அமெரிக்காவின் சூழ்ச்சியும்

கோப்பு வகை: டாலர் — lightink @ 11:05 மு.பகல்

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கப்பட்டு பல லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன, ஆனால் ஒருவர் கூட இந்நோய் தாக்கி இறக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பறவை காய்ச்சல் இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பரவியதாக செய்திகளும், ஊடகங்களும் மக்களுக்கு தெரிவித்தன. இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவுவதற்கு முன்பே இந்திய அரசு 2005ல் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஷ் என்ற கம்பெனியிடமிருந்து சுமார் 5.8 கோடி ரூபாய் மதிப்பிலா டெமிப்ளு எனும் பறவை காய்ச்சல் வந்தால் மனிதர்கள் ஊட்கொள்ளும் மருத்தினை வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், பெருமளவு பங்குகளை வைத்திருப்பவர் அமெரிக்க ராணுவ செயலாளர் டொனால்டு ரம்ஸ்பெல்டு.

அந்த சமயத்தில் இந்தியாவில் பறவை காய்ச்சலுக்குகான அறிகுறியே இல்லை. ஏன் மனிதர்களையும், பறவைகளையும் அது தாக்கவில்லை. ஆனால் நமது மத்திய அரசு ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு அதுவும் அதிக விளையுள்ள மருத்துகளை வாங்கியுள்ளது. மார்ச் 19, 2006 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நீலோல்பால் பாசு இந்த மோசடியை பகிரங்கமாக வெளியிட்டார். உடனே மத்திய சுகாதார துறை ஒரு அறிக்கையின் மூலம் இது வரை 70 ஆயிரம் டோஸ் மருத்துகள் வாங்கப்பட்டுள்ளது இனி கொள்முதல் நிறுத்தப்படுகிறது மேலும் இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று அறிவித்தது.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் 16 நாடுகளில் 350 பேருக்கு பறவைக் காய்ச்சல் தோன்றியுள்ளது. 2003ல் 217 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இந்த நோய் மனிதனை பாதிக்கவில்லை. பறவை காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் 70 டிகிரி சென்டிகிரெட் வெப்பத்தில் இறந்து விட கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் இக்கிருமிகள் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றும் தன்மை கொண்டதல்ல. ஆகவே இந்தியர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று தெரிவித்தது.

சந்தை கிடைத்தால் சாணியையும் விற்பது போல அமெரிக்கா 2006 ஜனவரி 23 அன்று இந்திய சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு தகவல் தருகிறது. அது என்னவென்றால் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோயை குணப்படுத்துவதற்கு குறிப்பாக, குழந்தைகளுக்கு உண்டான டெமிப்ளு ஸிரப் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என்பதை கவனியுங்கள் என்றும் ( டெலிகிராப் தினசரி) அடுத்து 29 அன்று இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கின்ற வகையில் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தது. இத் தகவல்களை தனியார் தொலைக்காட்சிகளும், செய்தியாக வெளியிட்டு மக்களிடையே பீதியை கிளப்பியது. திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்ததன் பலன் அமெரிக்க ராணுவ செயலாளர் டொனால்டு ரம்ஸ்பெல்டுன் வங்கிக் கணக்கு நிரம்பி வழிய ஆரம்பித்தது.

இந்த மருந்தின் காப்புரிமை பெற்ற ரோஷ் நிறுவனம் 2003ல் பெற்றுத்த நஷ்டத்தில் இயங்கிவந்தது. ஆனால், 2005ல் 16 சதவீதம் நிகர லாபம் பெற்றுள்ளது. பொய் மற்றும் பீதி கிளப்பும் பிரச்சாரத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளை பயமுறுத்தி தன்னுடைய மருத்துகளை விற்று கொழுத்த லாபம் சம்பாதித்துள்ளது. இதே போன்ற பல்வேறு சூழ்ச்சிகளை உலக நாடுகள் முழுவதும் செய்வதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க செய்வதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் ஆகும்.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.