மாதம் மும்மாரி பொழிகிறதா?

மார்ச் 30, 2008

அம்மனம் ஆனது தேசியம்

கோப்பு வகை: அரசியல் — lightink @ 4:09 பிற்பகல்

சர்வதேச தாதா அமெரிக்கா தைரியமாக இப்போது இந்தியாவை மிரட்டுகிறது அணுசக்தி உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்றவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார் நிகொலஸ் பர்னஸ். சென்ற மாதம் வரை இந்திய அரசிடம் அமெரிக்கா போனால் வராதது, பொழுது விடிந்தால் சிக்காது என்று நேயமாக பேசியது. ஆனால், இப்போது அணு சக்தி ஒப்பந்தம் சம்மந்தமாக இந்தியா துணிச்சலான முடிவு எடுக்க வேண்டுமென்கிறார். அமெரிக்கா சார்பாக இவர்தான் அணுசக்தி ஒப்பந்தத்தை கண்காணித்து வருபவர். இவர் அமெரிக்காவின் உள்துறை இணைஅமைச்சரும் ஆவார்.

உடன்பாடு என்பது நம்பிக்கை அடிப்படையில், நட்பின் அடிப்படையில் மலர வேண்டும். ஆனால் இங்கே ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா என்று நெஞ்சுக்கு நேராக வாளை நீட்டுகிறது அமெரிக்கா. காரணம், அமெரிக்காவின் பொருளாதாரம் எல்லா துறைகளிலும் நொறுங்கி வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா மீது வலுக்கட்டாயமாக அணுசக்தி உடன்பாட்டை திணித்து தன்னுடைய வலிக்கு நிவாராணத்தை தேடிக்கொள்ள முயல்கிறது. இதுவரை எத்தனையோ நாடுகள் நமக்குஅணு உளைகளை அமைத்து தந்து இருக்கிறான. இவற்றில் ஒன்றுகூட அமெரிக்கா துளிகூட உதவியத்ில்லை. தற்சமையம் கூடங்குளத்தில் உள்ள அணு மின்நிலையம் எந்த ஒப்பந்தமும் போடாமல் ரஷ்யா நிறுவி தருகிறது.

அண்மையில் ரஷ்யாவிற்கு சென்ற நமது பிரதமர் எந்த அடிமை ஒப்பந்தமும் இல்லாது இன்னும் மூன்று அணு உலைகளை அமைத்து தர ரஷ்யா முன்வந்தது. ஆனால் அமெரிக்காவிற்கு பயந்து அந்த உடன்பாட்டில் கையெழுத்துப் போடாமலே வெறுக்கையோடு திருப்பி வந்தார் மண்மோகன் சிங். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாவு வாங்குவது இந்தியாவிற்கு அதிக லாபம் தரும். இந்த திட்டத்தை உருவாக்கியவர் அன்றைய பெட்ரோலிய துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர். அமெரிக்கவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து அவரை மன்மோகன் சிங் அவரை வேறு துறைக்கு மாற்றினார்.

இதற்கு முன்பு இந்தியாவில் பல்வேறு அரசியல் வாதிகள் ஆட்சி புரிந்துள்ளார்கள். அப்போது எல்லாம் அமெரிக்கா தன் வாலை நுழைக்க முயற்சி செய்தது. அதன் பாட்சா பலிக்கவில்லை. இப்போது மன்மோகன் சிங் பிரதமர் ஆனதும் அமெரிக்கா துள்ளி குதிக்கிறது. காரணம் மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்ல. அமெரிக்காவின் உலகமாயம், தாராளமாயம், தனியார்மையம் போன்ற தத்துவங்களுக்கு விளக்கவுரை எழுதிய பொருளாதார மேதை. அமெரிக்காவின் அதிக்கத்தில் உள்ள உலக வங்கியில் தலைமை கணக்கராக இருந்தவர். எனவே அவர் சிந்தனை ஓட்டம் எப்படியிருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

“கடைசியாக அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை கவனிக்காமல் அடுத்து வரும் ஜூன் மாதத்திற்குள் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும். எங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா செயல்படுத்த வேண்டும்” என்று பர்ன்ஸ் கட்டளையிடுகிறார். இப்போது மன்மோகன் சிங் வாயே திறப்பதில்லை. அவருக்காக நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜித் தான் பதில் சொல்கிறார். இதுவரை யாரும் இந்தியாவின் தேசியத்தை இப்படி அம்மனம் ஆக்கியத்ில்லை.

மார்ச் 26, 2008

பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை, ஒழிக்க வேண்டாமா?

கோப்பு வகை: சிதம்பர ரகசியங்கள் — lightink @ 10:31 மு.பகல்

தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது.கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோதுதில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, இதே தில்லை நடராசன் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் என்ற விஷ்ணு கோயிலும் சிறிய அளவில் உள்ளது. சிவன் கோயிலுக்குள்ளே விஷ்ணு கோயிலும் இருப்பது சிதம்பரத்தில் தான். இந்த பெருமாள் கோயிலுக்கு, வைணவப் பார்ப்பனர்களே அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது. அப்படியானால் நடராசன் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர முடியாதா?

கோயிலுக்குள்திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அறநிலையத்துறை முதலில் அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, தீட்சதப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றம் சென்ற பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தேவாரம் பாடும் உரிமை, அரசின் ஆணையாகவே வெளிவந்தது. அரசின் ஆணைக்கே கீழ்ப்படிய மறுக்கும் தீட்சதப் பார்ப்பனர்களை, அரசு சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
சைவர்களின் பக்தி நூலாகிய – சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை இரண்டாம்குலோத்துங்கன் யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்து, இதே தில்லை நடராசன் கோயிலிலே தான் அரங்கேற்றம் செய்தான். குலோத்துங்கன் ஆட்சியில் சேக்கிழார் அமைச்சர். அந்தத் தில்லையிலே தேவாரம் ஓதுவதற்கு தடை போடுகிறார்கள், தீட்சதப் பார்ப்பனர்கள். தேவாரம் ஓதியதால் தீட்டாகிவிட்டது என்று தீட்சதப் பார்ப்பனர்கள், தீட்டுக் கழிக்கிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை, ஒழிக்க வேண்டாமா?

மார்க்ஸ் – ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம்

கோப்பு வகை: சத்குரு ஜக்கி வாசுத, மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் — lightink @ 9:33 மு.பகல்

அந்த காலத்தில் பிரபலமானவர்கள் அல்லது தமக்கு பிடித்தவர்களிடம் வாழ்வியல் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் வழக்கம் இருத்தது. அவ்வாறு தந்த மார்க்ஸ்ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம் தான் கீழே உள்ளது.. இதையும், இன்று உள்ள தலைவர்களும், நடிகர்களும், ஒப்புதல் வாக்குமூலங்களை ஒப்பிட்டு பாருங்கள்.

மார்க்ஸ் வாக்குமூலம்

பிடித்த குணம்:                                           எளிமை
உங்களது முக்கிய குணாதிசியம்: குறிக்கோளில் விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி:                                                       போராடுவது
வருத்தம்:                                                       சரணடைவது
மன்னிக்கும் தவறு:                                 ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு:               அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு:        புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள்:                             ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர்:                         டைட்ரோட்
பிடித்த கதாநாயகன்:                              ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி:                                 கிரெட்ஸ்சன்                                      பிடித்த நிறம்:                                             சிவப்பு
பிடித்த பெயர்:                                          லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு:                                        மீன்
பிடித்த மலர்:                                           டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர் )
பிடித்த கூற்று:                                    மனித குலத்திற்கு பொருந்துகின்ற எதுவும் அந்நியமானது அல்ல
பிடித்த முழக்கம்
:ஓவ்வொன்றையும் சந்தேகப்படுடெஸ்கார்ட்டஸ்

மார்ச் 25, 2008

அமெரிக்காவின் அடியாள் ஜக்கி வாசுதேவ்

கோப்பு வகை: ஜக்கி வாசுதேவ் — lightink @ 4:06 பிற்பகல்

தமிழ்நாட்டில் திடீர் திடீரென்று சாமியார்கள் தோன்றுவர்கள். அப்படி தோன்றும் சாமியார்களை முதலாளித்துவ ஊடகங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுவதும், பின்பு அவர்களின் லீலைகள் தெரிந்த உடன் கீழே போட்டு உடைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இது போன்று ஒரு சாமியார் தமிழகத்தில் இப்போது உலாவிக் கொண்டு வருகிறார். இவரின் தாரக மந்திரம்அத்தனைக்கும் ஆசை படு“. இது மட்டும் இவருடைய வேலை அல்ல. தமிழகம் முழுவதும் மரம் நடுவது இவரின் பிரதான தொழில், அவர் தான் ஜக்கி வாசுதேவ்.

இவர் தற்போது நக்கீரன் ஏட்டில் வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த பிரபல கவிஞ்ர்களில் ஒருவரான திரு. பழமலாய், சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நீங்கள் மரம் நடுவதற்கு ஆகும் செலவுகளை கோக், பெப்ஸி, போன்ற அமெரிக்க பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளிடம் பெறுவது உண்மையா என்றும், இந்த கம்பெனிகள்தானே இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளை லாபத்திற்கு விற்று கொழுக்கின்றன. அவர்களிடமே சென்று மரக்கன்று நட நிதி பெறுவது நியாயமா என்பது தான் அந்த கேள்வியின் சாராம்சம்.

உடனே வந்தது கோபம், கோபத்தில் விளைந்த, ஆத்திரத்தின் மூலம் தான் பணம் வாங்கிய உண்மையை ஜக்கி ஒத்துக்கொண்டார். இதற்கு மிக பெரிய விளக்கம் வேறு.

இன்றைய உலகில் பொருளாதார கட்டமைப்பு தேச எல்லைகளை தாண்டிவிட்டது. இன்றைய சூழலில் ஒரு வணிக நிறுவனத்தை குறிப்பிட்ட தேசத்துடன் அடையாளப்படுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர் காலத்தில் ஒரே உலகம் என்ற நிலையை எட்ட வாய்ப்பிருக்கிறது – ஜக்கி வாசுதேவ்

இதை தான் பல காலமாக அமெரிக்கா ஒரு துருவம், ஒரு உலகம் என்று கூறி வருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், அமெரிக்காவின் கீழ் வரவேண்டும் என்று பல நாட்களாக புஷ் கனவு காண்கிறார். இதை தான் ஜக்கி அவர்களும் பிரதிபலிக்கிறார்.

மினரல் வாட்டர் இந்தியர்கள் தங்களது ஆரோக்கியத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் விரும்பி வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனம் இந்திய குடி தண்ணீரை உறிஞ்சுகின்றன என்று கூறுவதெல்லாம் பழமையில் ஊறிய சிந்தனைஜக்கி வாசுதேவ்

அடடா, என்ன ஒரு கருணை, இந்தியாவில் கோடி கணக்கான மக்களுக்கு பாதுகாக்க பட்ட குடிநீர் கிடைப்பதில்லை என்பது ஜக்கிக்கு தெரியாதா? இந்தியர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தர வக்கில்லாத அரசாங்கம் தாமிரபரணியில் தினமும் சுமார் 1,00,000 லிட்டர் தண்ணீரை உறிஞ்ச கோக்கிற்கு அனுமதி அளிக்கிறது தமிழ் நாடு அரசு. 90 பைசாவிற்கு ஒரு லிட்டரை அரசிடம் வாங்கி பாட்டிலில் அடைத்து 10 ரூபாய்க்கு மேல் விற்கிறது. ஏன் இதை அரசால் குறைந்த விலையில் தர முடியாதா?

கோக் நிறுவனம் அமெரிக்காவிலிருந்தாலும், இந்தியாவில் அதன் உரிமத்தை இந்தியர்கள் தான் பெற்று உள்ளனர் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் வாசுதேவ். ஆனால், அதில் கிடைக்கும் மொத்த லாபமும் அமெரிக்காவிற்கு தான் செல்கிறது என்றும் அதை கொண்டு ஆயுதங்கள் செய்து உலக மக்களை கொன்று குவித்து வருகிறது என்பது சத்குருவின் ஞான திருஷ்டியில் தெரியவில்லையா?

அப்படி அமெரிக்க குளிர்பான நிறுவனங்கள் தனது ஈஷா மையத்திற்கு நிதியுதவி அளிப்பது ஒரு வகை நிவாரணம் தான் என்றும் இவர் கூறுகிறார். நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சுவிட்டு மரம் நட நிதி தருகிறார்கள் என்பது பசுவின் மடியை அறுத்து விட்டு புன்ணாக்கு வாங்க காசு தருகிறார்கள் என்று கூறுவதற்கு சமம் ஆகும்.

குறுகிய எல்லைக்குள் நின்று வேதம் வளர்ப்பது விலங்குகளின் இயல்பு, மனிதர்கள் அதை செய்ய தேவையில்லை. நாயும், பூனையும் தங்கள் எல்லைகளை நிர்ணயிப்பது போல் மனிதன் செய்யலாகாது என்று உபதேச மழை வேறு. என் நாடு, என் மொழி, என் மக்கள், என் தண்ணீர் என்று கூறுவதெல்லாம் விலங்குகள் வளர்க்கும் பேதம். இந்தியர்களெல்லாம் கோவணத்தோடு நின்று கொண்டு அத்தனைக்கும் ஆசை பட வேண்டியது தான். விட்டால், எதற்கு தனி நாடு, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம் எல்லாவற்றையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்றும் கூட இவர் கூறுவார். இப்போது தான் தெரிகிறது இவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் ரகசியம்.

நாய்க்கும், பூனைக்கும் இருக்கும் குறைந்த பட்ச சுயமரியாதை கூட இந்தியர்களுக்கு இருக்ககூடாது அதுதான் கடவுளை அடையும் வழி என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். இது தியானம் தந்த ஞானம் அல்ல. டாலர் தந்த ஞானம்.

மார்ச் 23, 2008

சவார்க்கர்

கோப்பு வகை: R.S.S — lightink @ 8:52 மு.பகல்

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, ‘ஆர்.எஸ்.எஸ். & கோ’வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட ‘திலக்’காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

விநாயக் தாமோதர் சவார்க்கர், பார்ப்பனர்களிலேயே தூய பிரிவாகக் கருதப்படும் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். பார்-அட்-லா படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போன சவார்க்கர், அங்கே “சுதந்திர இந்தியச் சங்கத்தில்” இணைந்த இந்திய மாணவர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்ததாக இங்கிலாந்து அரசு கருதியது.

வங்காளத்தின் ‘குதிராம் போஸ்’க்கு எதிரான வழக்கில் வாதாடிய சர். கர்ஸன் என்பவரை 1909-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றதாக ‘மதன்லால் திங்கரா’ என்ற சுதந்திர இந்தியச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலையில் வி.டி. சவார்க்கருக்கும் தொடர்பு இருந்ததாக 13.3.1910-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் மேலும் விசாரணைக்காக சவார்க்கரை கப்பலில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியில் பிரான்சில் ‘மார்செய்லீஸ்’ என்ற துறைமுகத்தில் 8.7.1910-அன்று சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பித்துச் செல்ல முயன்று, உடனே பிடிபட்டார் சவார்க்கர். தண்டனையில் இருந்து தப்பும் எண்ணம் தொடக்கம் முதலே அவருக்கு இருந்து வந்தது. கைது செய்யப்படும் முன்பே பாரீசுக்கு தப்பிச் சென்று, அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல், எப்படியும் கைது செய்யப்படுவோம் என்று அறிந்து தொடர் வண்டியில் வந்து கொண்டிருக்கையில் விக்டோரியா ஸ்டேஷன் அருகில் பிடிபட்டார்.

அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமான் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டு 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டார். சிறைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், 6 மாதம் கழித்து ஒரு கருணை மனு எழுதி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார், கருணை மனு வீரரான சவார்க்கர். அது கண்டுகொள்ளப்படாமல் போகவே மீண்டும் அதை நினைவூட்டி 1913-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் ‘புகழ்பெற்ற’ கருணை மனுவினை அனுப்பிவைத்தார்.

கருணை மனுப் போர் தொடுப்பதில் மட்டும், என்றும் சளைக்காத மன்னிப்புக் கடித மாவீரராகவே திகழ்ந்தார் அவர். அந்தமானில் அடைக்கப்பட்டபோதும் சரி, காந்தியார் படுகொலையில் சிறையில் இருந்தபோதும் சரி – அவர் எழுதிய கருணை மனுக்கள் மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும், தடாலடியாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்று எழுதுவது சவர்க்கரின் தனிச்சிறப்பு.

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

“வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்” என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், “ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்” என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் ‘அந்தமானில் எனது ஆண்டுகள்’ என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் “1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்பமாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்… எனவே பாதை தவறிய இந்த பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை” என்று குறிப்பிடுகிறார்.

இப்படியாக, அந்தமானில் சவார்க்கரின் வீர, தீர, தியாகப் பெருவாழ்க்கை நிறைவுற்று 1921-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அங்கிருந்து மாற்றப்பட்டு, 1921-24 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தின் அலிப்பூர் சிறையிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரியிலும் சிறைவைக்கப்பட்டு, 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் இரு நிபந்தனைகளுடன் விடுதலையானார் சவார்க்கர்.

1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறுவதில்லை.

2.நேரடி அரசியலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராடுவதில்லை என்பவை அந்த நிபந்தனைகள்.

சொன்னபடி செய்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு அவர் ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈ டுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார்.

இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எசையும் கொண்டு, இந்துத்வாவைக் கட்டமைக்கப் பணியாற்றினார். சவார்க்கர் தன்னை ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் கலாச்சார தேசியமாக இந்துத்துவத்தின் அடித்தளத்தில் இந்து அரசை நிறுவுவதே பணியாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டு விடுதலையான சவர்க்கார் 5 ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈ டுபடுவதில்லை என்று தெளிவுபடுத்தியும், மேலும் அரசு அந்தக் காலக் கெடுவை நீட்டிப்பதாக இருந்தாலும், அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகும். 1925-ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை எழுதி காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார்.

காந்தியார் கொலை வழக்கு செங்கோட்டையின் தனி விசாரணை அரங்கிற்குள் நடத்தப்பட்டபோது, அதில் வீர(!) சவார்க்கர் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும், தன்னால் எந்தத் தீங்கும் நேரவில்லையென்றும் புலம்பியபடியே பேசியவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது காவல் துறையினருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார் அது நிராகரிக்கப்பட்டது.

பரபரப்பான அந்த கொலை வழக்கில் நீதிபதி ஆத்மசரண் அவர்களால் “குற்றம் நிரூபணமாக போதிய ஆதாரம் இல்லை” என்று விடுவிக்கப் பட்டார் சவார்க்கர். காரணம் மேற்கூறிய திட்டத்தில் சவார்க்கரின் பெயர் இடம் பெறாதபடி நேரடி முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அளித்த வாக்குமூலங்கள்.

நீதிமன்றத்திலோ சவார்க்கர் வெளியிட்ட கருத்து அவரது தீரத்தை (!) வெளிப்படுத்தியது. ‘கோட்சேயும், ஆப்தேயும் தங்களை பூனாவில் உள்ள மகாசபை வீரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறினார். ஆனால், 1937-ஆம் ஆண்டு முதல் கோட்சேவுக்கும் சவார்க்கருக்கும் இருந்த தொடர்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. சவார்க்கரின் மேற்பார்வையில் கோட்சே நடத்திய இந்துராஷ்டிரா இதழும், கோபால் கோட்சேயின் வாக்கு மூலங்களும் தனஞ்செய்கீரின் (சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்) நூலுமே சாட்சி.

இந்த வழக்கு விசாரணையிலும் ஒரு கூத்து. வழக்கில் இருந்த மற்ற அனைவரி டமிருந்தும் தனித்துக் காணப்பட்டவராகவும், சோகமே வடிவான முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தவராகவும் சவார்க்கர் காணப்பட்டார். தூக்கு மேடை ஏறும் முன் கோட்சேயின் கடைசித் துயரமே, தனது குருஜி தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.

எங்கும், எதிலும், எப்போதும் பட்டப்பெயரைத்தவிர வீரத்திற்கும், சவார்க்கருக்கும் நெருக்கம் இருந்ததே இல்லை.

நன்றி: உண்மை

மார்ச் 19, 2008

இது தான் சிதம்பர ரகசியமோ?

கோப்பு வகை: அரசியல் — lightink @ 5:18 பிற்பகல்

சிதம்பரம் 66,000 கோடி தள்ளுபடி செய்தாலும் செய்தார் முதலாளித்துவ ஊடகங்கள் அதிலும் குறிப்பாக NDTV, Times Now, CNN-IBN போன்ற தொலைக்காட்சிகளும் முதலாளித்துவ பத்திரிகைகளும், இந்த தள்ளுபடியால் இந்திய பொருளாதாரம்அடி பாதாளத்துக்கு போய்விடும். இந்த தொகையை எப்படி இடு செய்யபோகிறார், இந்த பணத்தை எங்கிருந்து பெறப் போகிறார், இதை இந்திய பொருளாதாரம் தாங்குமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு பாமர மக்களை குழப்பத்தில் தள்ள முயற்சி செய்கிறது. இது ஒருபுறம், என்றால் சிதம்பரம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது போல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை ஆதரிக்கும் ஊடகங்கள் பாராட்டி எழுதுகின்றன.

ஆனால், உண்மை நிலையை ஆராய்ந்தால் இந்த தொகை மத்திய அரசுக்கு மிக சாதாரண விஷயம். விவசாயி என்றால் கையை இருக்க கட்டிக் கொள்ளும் சிதம்பரம் முதலாளிக்கு அள்ளி அள்ளி வழங்குகிறார். உதாரணமாக இந்திய அரசு உடமை ஆக்கபட்ட வங்கிகளில் இருந்து இந்திய பெரு முதலாளிகள் கடன் வாங்கி விட்டு போட்ட நாமம் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி. இதை கடன் என்று சொல்லுவதில்லை ‘ செயல் படாத மூலதனம்’ என செல்ல பெயர் வைத்துள்ளார் திரு. சிதம்பரம் அவர்கள். அது மட்டுமா பெரிய நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த அட்டவணைப்படி செலுத்த வேண்டிய வரி 33% . ஆனால், செலுத்தி உள்ளதோ வெறும் 19% மட்டுமே. இப்படி சத்தமில்லாமல் விலக்கு கொடுத்தன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.79 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் பட்டியலை வெளியிடு மாறு கேட்டால் அது கடன் வாங்கியவர்களின் மனதை புண்படுத்தும் செயல் என்கிறார். உள்ளூர் வங்கியில் ஒரு விவசாயி கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் போனால் அடுத்த நாள் பத்திரிகைகளில் ஏதோ இந்திய தேச துரோகி போல் சித்தரித்து அவர் புகைப்படம் வெளியிடப்படும். கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியில் இருந்த சிதம்பரம் இப்போது மட்டும் ஏன் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்கிறார்? இது தான் சிதம்பர ரகசியமோ?

சுயநல மருத்துவர்களும், அரசும்…

கோப்பு வகை: பகுக்கப்படாதது — lightink @ 3:47 மு.பகல்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சுற்று போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள் தமிழக முதல்வரும், மருத்துவத் துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை முடிந்த பிறகு நாலரை ஆண்டு காலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம்(எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின் படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் – ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக்கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.

கிராமப் புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்பவர்கள் “சமூகத்தின் எதிரி” என்று அன்புமணியும் அவரது குடும்ப கட்சி தலைவர் ராமதாசும் பேசி வருகின்றனர். உண்மை அதுவல்ல சற்றுக் கவனத்தோடு பார்த்தால் நான்கு அறிய முடியும். இது கிராமப் புற ஏழை மக்களை ஏமாற்றும் வேலை. எப்படி, ஒரு நான்கு மாதங்களில் கிராம புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராம புறமக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆனால், கிராமப் புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம புற சேவை செய்ய முடியும்? மருத்துவமனைகளில் காலியாக உள்ள பனியிடங்களை உரிய மருத்துவர்களை நியமிக்காமல் தற்காகமாக பயிற்சி மருத்துவரை நியமிப்பதன் மூலம் நிரந்தரமாக மருத்துவரை மருத்துவமனையில் நியமிக்க தேவையில்லை. அரசுக்கு செலவும் மிச்சம். மருத்துவரும் அரசாங்க வேலையில் ஒரு வருடம் மட்டுமே பணிபுரிவார். பின்பு அவர் வேலையை இந்து விடுவார். இதனால் அரசு மருத்துவம் அளிக்கும் கடமையில் இருந்து தவருகிறது.

மேலும், இத் திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர் தரப்பில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. கல்வி கடன் பெற்று மருத்துவப் படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக வேலைக்கு போகாவிட்டால் கடன் சுமை மேலும் ஏறுகிறது. பட்ட மேற்படிப்புக்கு செல்வதில் பிரச்சினை ஏற்படும். உரிய வயதில், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது. இவை எல்லாம் சொந்த பிரச்சனைகள். கல்வி கடன் அடைப்பதில் பிரச்சனை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும் படியும் எளிய தவனையாகும் படியும், உதவி தொகை அளிக்கும் படியும் கோரலாமே! மேலும் கட்டாய கிராமப்புற சேவை என்பது மருத்துவர்கள் கூறுவது போல ஒருவருடம் இல்லை வெறும் நான்கு மாதமே.இவர்களுக்கு திருமணம் செய்து கொள்வதை எது தட்டுகிறது என்பது தான் புரியவில்லை. இன்று சமூகத்தில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளியிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் பார்க்கவே கண் கூசுகிறது. அதிலும் கிராமப் புற மருத்துவமனைகளில் சொல்லவே வேண்டாம்.கிராமப்புற மருத்துவமனைகளில் பணியமர்தப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுபேற்க மறுப்பதும்,
பொறுப்பெற்ற பின் விலகுவதும் அல்லது அருகில் உள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதும் நாம் காண்கிறோம்.

இதைவிட கொடுமை ஸ்டான்லி மருத்துவர்களின் போராட்டம் உடல் உழைப்பை கேவலப்படுத்தும் விதமாக குப்பையை கூட்டுவது, மருத்துவமனையை சுத்தம், செய்வது என் தனது மேல்தட்டு வர்க்க திமிறை வெளிப்படுத்தியது மகா கேவலமான செயல். இதே ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி மூளை காய்ச்சலில் இறந்த போது தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடாமல் தங்கள் மருத்துவமனையை சுத்தம் செய்வேண்டியது தானே அப்போது எங்கே போனது இவர்கள் சமூக அக்கறை? இது கூட பரவால்லை சில மருத்துவ மாணவர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் ரத்தத்தை தானம் செய்தனர் இது தானம் செய்பவர்களை கொச்சை படுத்தியது. எத்தனையோ நோயாளிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் தங்கள் ரத்தத்தை தானம் செய்கின்றனர். இனி அவர்கள் எப்படி தானம் செய்வார்கள்? இப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு செலவிடும் மக்கள் வரிப் பணம் சுமார் 10 லட்சத்திற்கு மேல். மக்களின் வரிப் பணத்தில் இளங்கலை பட்டம் பெற்று விட்டு சேவை செய்ய வெளிநாடு சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் கிராமப் புற சேவை செய்ய தயார் என்ற பொய் கோஷம் போடுவார்கள். இவர்களுக்காகவே இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் ஒன்றை இயற்ற தயாராக உள்ளது. அப்படி என்றால் நம் நாட்டவர் எவ்வளவு பேர் அங்கே இருப்பார்கள் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் காலையில் அரசு மருத்துவராகவும் இருப்பார், மாலையில் தனியார் கிளினிக்கில் வேலை செய்வார். இன்னும் சொல்வதென்றால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் கிளினிக்கு வரசொல்லும் மருத்துவரும் உண்டு. சில மாநிலங்களில் ஒரு வருடமோ, இருவருடமோ கட்டாயமாக கிராமப் புற சேவை செய்யவேண்டும். அதனால் தான் தமிழ் நாட்டில் மட்டும் இப் போராட்டம் வெடித்தது.

மத்திய அரசு மருத்துவ துறைக்கு ஒதுக்கும் நீதி 1.3 % (மொத்த பட்ஜேடில்) மாநில அரசு 5.5%. இலங்கை அரசு கூட பொது சுகாதரத்திற்கு இந்தியாவை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கிறது. மருத்துவ பணியிடங்கள் பல காலியாகவே உள்ளன. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் 4 மாதத்தில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் என்னத்த கிழித்து விட போகிறார்கள் .தமிழ் நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர்களில் சுமார் 70 % தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் அரசு மருத்துவராக பணிபுரிந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல். இதில் சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் உள்ளனர். தமிழகம் முழுவது 1,590 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. (2005 ஆம் ஆண்டு ஆய்வு) 1991க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதும்மிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் எண்ணிக்கை 18,671 ஆகும். அது 8வது ஐந்தாண்டுத் திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால் 1997-2002க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் உருவாக்கினார்கள். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா முழுவதும் வெறும் 394 சுகாதார நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இது தான் நிலமை. இதை வைத்துக்கொண்டு தான் அனைவருக்கும் சுகாதாரம் வழங்க போகிறார் “அன்பு” மணி. உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால்,வேலை உத்தரவாதம் அளித்து இளநிலைமருத்துவரிகளை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் வசிப்பிடம்,வாகன வசதி, போதிய மருந்துகள், மருத்துவ உபகாரங்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், படுக்கை போன்றவற்றை நியமிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பல தனியார் மருத்துவமனைகள் பணம் தின்னும் கழுகாக மாறிவருகின்றன. சட்ட விரோத கருச்சிதைவுகள் தொடங்கி உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்கு புறம்பான அத்தனை செயல்களும் நடக்கின்றன. பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களை பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரனங்கள் வரிச்சலுகை பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவீதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து இந்த சலுகைகள் பெற்றுள்ளன. அதே போல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்க்கொள்வதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் இலவசமாக செய்யப்படவேண்டும். எந்த ஒரு தனியார் மருத்துவமனை இந்த வாக்குறுதியை நடைமுறை படுத்தியிருக்கிறதா? இது தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது பதில் அளித்த சுகாததரத்துறை இணை அமைச்சர் ” சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறையை மாநில அரசுகள் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.

ஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.

மார்ச் 17, 2008

நியுட்டனின் மூன்றாவது விதி

கோப்பு வகை: அரசியல் — lightink @ 8:07 மு.பகல்

சென்னை: ஜெயலலிதா-சசிகலா மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை கையாண்டு வரும் நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் கட்சியிலிருந்தும், வழக்குகளிலிருந்தும் விலகியுள்ளார் ஜோதி.

இதையடுத்து அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.

கடந்த 12 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக தொடர்பான பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் ஜோதி. ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை. மாறாக பாலகங்காவை நிறுத்தினார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஜோதி, அதிமுகவிலிருந்து விலகி விட்டார். மேலும், அதிமுக தொடர்பான எந்த வழக்குகளிலும் இனிமேல் ஆஜராக மாட்டேன், வேறு வக்கீல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

ஜோதியின் இந்த செயல் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.

ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.

அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல்.

தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கடந்த 1996ம் ஆண்டு ஜோதி, அதிமுக வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு அவரது ஸ்டைலிலேயே அதிர்ச்சி தந்துள்ள ஜோதியின் இந்தச் செயல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 15, 2008

மருத்துவ மிருகங்கள்

கோப்பு வகை: மருத்துவம் — lightink @ 4:18 மு.பகல்

அந்நியச் செலவாணி எனும் எச்சில் காசுக்காக இந்திய பெண்களின் மானத்தை விற்கலாம், வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம், நாட்டின் இறையான்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம், நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உயர்கல்வி கற்று நாசாவில் பணிபுரியலாம். இப்படி எல்லாம் உருவாக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயத்தில் ஏழைகள் மட்டும் விதி விலக்காக இருக்க முடியாது என்பதை தான் நிரூபித்து இருக்கிறார் டாக்டர். அமீத்குமார்.

மும்பையிலிருந்து அரியானாவின் குர்கான் வரை, 1993லிருந்து நேற்று வரை தன்னுடையமருத்துவ சேவையைசிறப்பாக நடத்தி வந்துள்ளார். இந்த சேவையை பாராட்டி 500 மேற்பட்ட தடவை சட்டத்தில் இருந்து தப்பிக்க வைத்து இருக்கிறது நமது இந்திய அரசு. சட்டம் ஒழுங்கைக் காப்பதாக கூறிக்கொள்ளும் போலீசுநீதித் துறைஅதிகாரவர்கம் அடங்கிய அரசு எந்திரம் அமீத்குமாருடன் சேர்ந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

சட்டத்தில் இதற்கு என்ன தண்டனை என்று பார்த்தால் சட்டப்படி குற்றம் நிருபிக்கப் பட்டால் 4 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், சட்டத்தை உருவாக்கும் முதலாளித்துவ அரசு சட்டப்படியே தப்பிப்பதற்கும் வழி செய்து வைத்து இருக்கும். சட்டப்படி ஒரு நோயளிக்கு அவரது இரத்த வழி உறவுடைய உடன் பிறந்தவர்கள் உடல் உறுப்பை தானமாக கொடுக்கலாம். இதுதவிர, உணர்வுபூர்வமான கொடையாளியும் மனிதாபிமானத்துடன் தானமாக தனது உடல் உறுப்புகளை வழங்கலாம்.

‘உணர்வுபூர்வமான கொடையாளி’ எனும் பிரிவை பயன்படுத்தித்தான் மருத்துவ வியாபாரிகள் தமது தொழிலை சட்டப்படி நடத்துகின்றனர். தான் கைது செய்ப்படுவோம் என்று தெரிந்தும் தப்பி ஓட முயன்று இருக்கிறார். இவரது முயற்சிக்கு டெல்லி போலீஸார் பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரமாக நேபாளம் அனுப்பி வைத்தார்கள். பிறகு, வெற்றிகரமாக இந்திய போலீசு அவரை கைது செய்தது. இப்போது மருத்துவமனையை சோதனை செய்கிறது. இவை அத்தனையும் வீர தீர செயல்களாக சித்தரிக்கிறது முதலாளித்துவ ஊடகங்கள்.

தமிழகத்தில் மதுரை, ஈரோடு, திருப்பூர், பள்ளிப்பாளையம், சென்னை போன்ற இடங்களில் சிறு நீரங்கள் விற்ற அவலங்கள் கதை கதையாக வந்த போதிலும் இக்கும்பலை சேர்ந்தவர்களையோ, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்ளையோ இன்று வரை கைது செய்யப்படவில்லை. தேவர் சாதி பிரமுகராமான, மதுரை மீனாட்சி மருத்துவமனை உரிமையாளருமான டாக்டர். சேதுராமன் பற்றி பத்திரிகைகள் எழுதி கிழித்த போதும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இந்தியாவில் கிடைக்கும் மலிவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை உள்ளிட்ட மலிவு விலை மருத்துவ சிகிச்சைகளை காட்டிமருத்துவ சுற்றுலாகளை வளர்க்க அரசு பல்வேறு சலுகைகள் அளித்துவருகிறது.

மனத்தோடு வாழ்ந்த விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலை செய்து கொள்ளமுடியாத விவசாயி தன்னுடைய உடல் உறுப்பையை விற்றுராவது மானத்தோடு வாழ முயல்கிறான். அப்படிபட்ட மக்களையும், சமுதாயத்தில் கடவுளுக்கு சமமாக மருத்துவரை பார்க்கும் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி
எதற்கும் உதவாத பணத்தை பறிகிறது மருத்துவ கும்பல்கள்.

விவசாயத்தையும், நெசவையும், சிறு தொழில்களையும் தாக்கி அழித்துள்ள புதிய பொருளாதார கொள்கை இன்நாட்டு மக்களை உயிர் வாழ்வதற்காக தங்களுடைய உடல் உறுப்பை விற்கும் அவலத்தில் தள்ளி உள்ளது. இன் நிலையில் திரு. அன்புமணியோ அவசியமான திருத்தங்களை செய்து சட்டத்தை இன்னும் கடுமையாக்க போவதாக
பூச்சாண்டி காட்டிக்கொண்டிருகிறார். மக்களின் வரி பணத்தில் படித்து விட்டு இந்த சமுதாயத்தை மேலும் கொள்ளை அடிக்க வரும் மருத்துவ மிருகங்களை என்ன செய்வது?

மார்ச் 13, 2008

போங்கடா நீங்களும், உங்க சித்தாந்தமும்…

கோப்பு வகை: R.S.S — lightink @ 12:24 பிற்பகல்

மக்களவையில் மார்ச்11 அன்று இந்தியாவிற்கே ஒரு புதிய சித்தாந்தை உருவாக்கி தந்து உள்ளார் பயங்கரவாத பி.ஜே.பி., கும்பல்களில் தலைவர்களில் ஒருவரான திரு. வெங்கெயா நாய்டு. இந்தியாவில் கடந்த ஒருசில தினங்களில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெறியாட்டம் அடிவரும் R.S.S.,V.H.P., மற்றும் பி.ஜே.பி., குண்டர்கள் குறிப்பாக கம்யூனிஸ்டு அலுவலங்களையும், அதன் தலைவர்களின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுவதையும் பற்றி மக்களவையில் விவாதிக்க கூடாது என்கிறார் வெங்கெயா நாய்டு.

இது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன் இவர் வைத்த கோரிக்கையை கேட்டால் உங்களுக்கு தலை சூத்தும். என்ன என்ன கோரிக்கை தெரியுமா? கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியத்தை பற்றி விவாதிக்க கூடாது. குஜராத் கலரவங்களை பற்றி விவாதிக்க கூடாது. பாபர் மசூதி பற்றி விவாதிக்க கூடாது. தெகல்கா விவகரத்தை பற்றி பேசக்கூடாது.அதற்கு அவர் கூறும் காரணம் தான் புதிதாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் அந்த அந்த மாநிலங்களை சார்ந்து. இந்த பிரச்சனையை இங்கே எழுப்புவததிற்கு பதிலாக அந்த மாநிலத்தில் உள்ள சட்டசபையில் தான் விவாதிக்கவேண்டும்.

இதே நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் பா..., அலுவலகம் தாக்கப்பட்ட போது மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது அவருக்கு தெரியவில்லையா? இது தமிழகத்தை சார்ந்த பிரச்னை. இதை தமிழக சட்டமன்றதில் விவாதிக்க வேண்டியது தானே? அப்போது எங்கே போனது உங்கள் சித்தாந்தம்? பிறகு எதைப்பற்றி விவாதிக்க இந்த நாடாளுமன்றம்? வெறும் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தவா? அல்லது இந்திய மக்களை உன்னமும் எப்படியெல்லாம் வரியை விதித்து கொள்ளை அடிக்கலாம் என்பதை பற்றி விவாதிக்கவா?

போங்கடா நீங்களும், உங்க சித்தாந்தமும்

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.